ஜெயம் ரவி நடிப்பில் ஜனநாதன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான பேராண்மை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, வசுந்தரா, தன்சிகா, ஊர்வசி, வடிவேலு என்று ரசிகர்களுக்கு பரிட்சயமான பலர் நடித்திருந்தார்கள். அதேபோல இந்த படத்தில் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத சில அறிமுகம் நடிகைகளும் நடித்திருந்தார்கள் அந்த வகையில் வர்ஷா அஸ்வதியும் ஒருவர்.

Advertisement

மேற்கு வங்காளத்தில் பிறந்த இவர் நான்கு வயது இருக்கும்போது இவரது குடும்பம் தூத்துக்குடிக்கு இடம்பெயர்ந்து விட்டது மேலும் இவர் பிறந்தது மேற்குவங்காளத்தில் என்றாலும் படித்தது எல்லாம் சென்னையில்தான் சென்னையில் உள்ள ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர் சென்னையில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார் மேலும் இவர் முறையாக கதகளி நடனத்தை பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானது பேராண்மை படத்தின் மூலம்தான் இந்த படத்தில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தா.ர் இந்த படத்திற்கு பின்னர் நீர்ப்பறவை படத்தில் ஆட்சியராக நடித்திருந்தா.ர் நீர்ப்பறவை படத்திற்கு பின்னர் நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ, என்றென்றும் புன்னகை, பணிவிழும் மலர்வனம், அதிதி போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இறுதியாக கடந்த 2014ம் ஆண்டு வெளியான கங்காரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement

Advertisement

அந்தப் படத்திற்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவரது புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகியிருக்கிறது. அந்தவகையில் இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் நடத்திய சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தை காணும்போது இவரா இப்படி எல்லாம் போஸ் கொடுத்துள்ளார் என்ற அளவிற்கு மிகவும் வியப்பாக இருக்கிறது.

Advertisement