சினிமா பிரபலங்களை விட சீரியலில் நடிக்கும் பிரபலங்களே இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றனர். அதுவும் சீரியல் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டியது இல்லை. அந்த வகையில் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் “பேரழகி”.

Advertisement

இந்த சீரியல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் புதுமுக நடிகர்,நடிகைகள் பல பேர் நடித்து வருகின்றனர். மேலும் இதில் போதும் பொண்ணு என்ற ஒரு கிராமத்து பெண்ணின் வாழ்கியில் நடக்கும் விஷயங்களை மையமாக வைத்து மெகா தொடராக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தொடரில் போதும் பொண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பெண்ணின் பெயர் ஸ்ரீ காயத்ரி ராஜா . இவர் முதன் முதலில் 2015 ஆம் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான “இனிமே இப்படி தான் ” என்ற படத்தில் தான். அந்த படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Advertisement

Advertisement

பேரழகி சீரியலில் கருப்பான கிராமத்து நிறத்தில் நடித்து வரும் இந்த கறுப்பழகி, நேரில் வெள்ளைத்தோலில் படு மாடர்னாக தோற்றமளிக்கிறார். படங்களில் நடிக்க வந்த இவர் பின்பு வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் தான் சீரியலில் நடிக்க வந்து விட்டாராம்.

Advertisement