சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. ஆனால், ஆரம்பம் முதலே விஸ்வாசம் படத்துடன் ஒப்பிட்டு பல்வேறு சர்ச்சைகள் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

இந்த படத்தின் ட்ரைலெரிலேயே ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவது போல வசனங்களும் இடம்பெற்றது. இவை ஒருபுறம் இருக்க பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் சாதனை பெற்று வருகிறது என்று அணைத்து டிராக்கார்களும் கூறினர்.

Advertisement

இதையடுத்து சன் நிறுவனம் காண்டாகி எங்களுக்கே இன்னும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வரவில்லை அதனால் டிராக்கர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ட்விட்டரில் பதிவிட்டனர்.

இந்நிலையில் விஸ்வாசம் 125 கோடி வசூல் செய்துள்ளது என்று KJR நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். அதே போல
திருப்பூர் சுப்ரமணியம் இன்று கூறிய ஒரு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், இவர் தமிழகத்தின் முதன் முறையாக 11 நாளில்(வரும் ஞாயிறுக்குள்) ரூ 100 கோடி வசூல் செய்யவிருக்கும் படம் பேட்ட தான் என்று குறிப்பிட்டுள்ளார். படம் வெளியாகி 8 நாட்கள் ஆனா நிலையில் 11 நாள் என்று குறிப்பிட்டது தான் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement
Advertisement