நயன்தாரா படத்தை காட்டி கொள்ளையனை பிடித்த பெண் போலீஸ் ! எப்படி தெரியுமா ?

By Ajju · 25/12/2017
சினிமாவில் நடைபெறும் போலீசின் சாகச காட்சி ஒன்று தற்போது ரியல் லைபில் நடந்துள்ளது. உத்திர பிரதேசத்தின் தர்பாங்கா மாவட்டத்தின் பாஜக நிர்வாகி சஞ்சய்குமார் மகாதேவ். இவரது விலையுயர்ந்த செல்போனை திருடர்கள் திருடி சென்றுவிட்டனர். இதனால் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் அதிகாரி மதுபாலா தேவி திருடனை பிடிக்க களத்தில் இறங்கினார். இதன் மூலம் திருடப்பட்ட கைபேசியின் சி.டி.ஆர் விவரங்கள் சேகரித்து அதில் போடப்பட்டுள்ள நம்பரை கண்டு பிடித்தார் மதுபாலா. அந்த நம்பரை வைத்து அந்த திருடனை ஆசை வார்த்தை கூறி காதலிப்பதாக நடித்தார் போலீஸ் மதுபாலா. முன்னர் நம்பாத அந்த திருடன் ஹசன் முகமது. பின்னர் போலீஸ் தன்னுடைய புகைப்படம் என்று நயன்தாராவின் கீழே உள்ள புகைப்படம் தான் என்னுடைய படம் எனக் அனுப்பி வைத்தார். பின்னர் நயன்தாராவின் அழகில் மயங்கிய அந்த திருடன் ஹசன், அவரை நேரில் சந்திக்க திட்டமிட்டு ஓர் இடத்திற்கு வர சொன்னான்அந்த இடத்திற்கு திருடன் வந்ததும் லாவகமாக புர்காவில் மறந்திருந்த போலீஸ் மதுபாலா, திருடனை பிடித்தார். திருடன் பலமுறை பெண்ணின் போட்டோவை கேட்டும் கொடுக்காத போலீஸ் சரியான நேரத்தில் நயன்தாராவின் போட்டோவை ப்ரொபைல் பிட்சராக வைத்து திருடனை வரவைத்து பிடித்தது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full