சமீபத்தில் இயக்குனர் ஜெய் அமர் இயக்கத்தில் “காலேஜ் ரோடு” திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக சின்னகோட்லாவும் கதாநாயகனாக சன் மியூசிக் லிங்கேஷ்ஸும் நடித்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் வெளியிடப்பட்டது. இப்படத்தினை காண காலேஜ் ரோட்டு படத்தின் கதாநாயகனான லிங்கேஷும், பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனும் வந்திருந்தனர்.
டிடிஎஃப் வாசன் தமிழ் நாட்டில் பிரபலமான யூடுபர்களில் ஒருவர் என்பதினால் அவரை காண அதிக ரசிகர்கள் வருவார்கள் என்று முன்னெச்சரிக்கையுடன் அங்கு 20 க்கும் மேற்பட்ட போலீசார் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் டிடிஃப் வாசன் வருகிறார் என்று தெரிந்ததும் அவருடை ரசிகர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். இந்நிலையில் டிடிஃப் வாசன் வெள்ளை நிறமுடைய மஹேந்திராவில் வந்திறங்கினார்.
ஆனால் டிடிஃப் வாசன் வந்த வாகனத்தில் பதிவு எண் ஒட்டப்படாமல் இருந்தது. இதனால் அந்த வாகனத்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக போலீசார் 500 ருபாய் அபராதமும் சொகுசு வாகனத்தையும் பறிமுதல் செய்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று புத்தாண்டின் போது அவரது யூடியூப் சேனலில் ஒரு விடியோவை வெளியிட்டு பைக்கில் போனால்தானே பிரச்சனை அதனால்தான் இப்போது காரில் சென்று கொண்டிருக்கிறேன். இனி எப்படி பிரச்சை ஆகும் என்று பார்க்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்த்தினால் நெட்டிசங்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் போலீசார் டிடிஃப் வாசன் ஒட்டி வந்த காரை பற்றி விசாரித்ததில், அந்த கார் பிரவீன் குமார் என்ற அவரின் நம்பருடையது என்றும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அவரின் பெரியப்பாவுக்கு சொந்தமானது என்றும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த ஜூன் மாதம் வாங்கியதாக இருந்தாலும் பதிவு என்னும் ஒட்டப்படாமல் Registration என்கிற பலகையும் இல்லாமல் இருந்ததினால் வடபழனி போலீசார் அந்த காரை பறிமுதல் செய்துள்ளார். இதனால் டிடிஃப் வாசன் வேறு ஒரு வாகனத்தில் திரையரங்கிற்கு