பொள்ளாச்சி: பெண்களை பாலியல் சித்ரவதை செய்த கவர்களின் செய்தி தான் இன்று நாடு முழுக்க பேசப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் மூலம் பெண்களுடன் பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

அந்த செய்தியை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Advertisement

இந்த இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர். இதில் சபரிராஜன், திருநாவுக்கரசு,சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கும் இந்த வழக்கில் தொடர்புள்ளது என்ற தகவல் வெளியானது. பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

Advertisement

இந்த நேரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அப்போது அந்த காரில் இருந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் கொலை செய்யப்பட்டாரா என்றும் பேசப்பட்டு வருகிறது.

Advertisement
Advertisement