சமூக வளைத்தளத்தில் ஆபாச விடியோக்கள் புகைப்படங்கள் என்று பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பூனம் பாண்டே. இதுவரை இந்தியில் மூன்று படங்கள் மட்டுமே நடித்திருந்தலும் இணையத்தளத்தில் அம்மணி படு பேமஸ். இறுதியாக இந்தியில் ஜர்னி ஆப் கர்மா என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத அடிக்கடி தன்னுடைய காதலுடன் மோசமாக பதவியை வெளியிட்டுவந்தார்.

சமீபத்தில் கூட ஊராட்ங்கை மீறி தனது நண்பருடன் சொகுசு காரில் சுற்றியதால் இவர் மீது வழக்கு பதிவிட்டதாக சமூக வலைதளத்தில் வைரலானது . இது குறித்து வெளியான செய்தியில், பூனம் பாண்டே மற்றும் அவரது நண்பர் சரியான காரணமின்றி வெளியே அலைந்து கொண்டிருந்தனர். போலீசாரிடம் சிக்கிய அவர்களது பதில்களை போலீசார் ஏற்றுக்கொள்ளாததால் , ஐபிசி பிரிவு 188, 269 மற்றும் 51 (பி) ஆகியவற்றின் கீழ் மரைன் டிரைவ் காவல் நிலையத்தில் பூனம் பாண்டே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். மேலும், அவர்கள் வந்த BMW காரையும் போலீசார் சீஸ்செய்ததாகவும் செய்திகள் வெளியானது.

Advertisement

ஆனால், அந்த தகவலை பூனம் பாண்டே மறுத்து இருந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு இருந்தார். அதே போல தன்னுடைய காதலுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வளையதளத்தில் வெளியிட்டு வைரலானது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இவர் ஆபாச புகைப்படங்களை தனது பூனம் பாண்டே ஆப் மூலம் விற்றும் வருகிறார்.

இப்படி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன பூனம் பாண்டே, சமீபத்தில் திருமணத்தை முடித்துள்ளார். தனது நீண்ட நாள் காதலரான சாம் என்பவரை நடிகை பூனம் பாண்டே திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றதா கூறப்படுகிறது. சமீபத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பூனம் பாண்டே உன்னுடன் ஏழேழு ஜென்மம் வாழ காத்துக்கொண்டு இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Advertisement
Advertisement