தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சீனிவாசன். இவரை அனைவரும் செல்லமாக பவர்ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். இவர் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த லத்திகா என்ற படத்தை இயக்கி தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து இவர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இந்த படத்தை தொடர்ந்து பவர்ஸ்டார் அவர்கள் கோலி சோடா, மெர்லின், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, என்ன தவம் செய்தாயோ, ஓடு ராஜா ஓடு, காட்டுப் புறா போன்ற பல படங்களில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த கேப்மாரி என்ற படத்தில் பவர் பாண்டி துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருந்தார்.

Advertisement

மயங்கி விழுந்த பவர் ஸ்டார் :

இதைத் தொடர்ந்து தற்போது இவர் ஹீரோவாக ஒரு படத்தை இயக்கி நடித்து உள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்து இருக்கிறார். மேலும், அந்த படத்தின் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் சர்ச்சை பொருளாகக் கூட பேசப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து இருந்தார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவர் தீவிர சிகிச்சையும் பெற்று இருந்தார்.

இதற்கான வீடியோ, புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் தாம் சமீபாத்தில் பவர் ஸ்டார் பேசியுள்ள ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் அவர் தன் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.அந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் பிரபலம் மற்றும் நடிகையான வனிதா தொகுத்து வழங்கி இருந்தார்.

Advertisement

சீனிவாசன் பேட்டி :

பவர்ஸ்டார் சீனிவாசன் கூறியதாவது “நான் மதுரையில் அக்கு பஞ்சர் மருத்துவராக இருந்து வந்தேன். சென்னை வந்தவுடன் ஒரு படத்திற்கு பண உதவி செய்திருக்கிறேன். பின்னர் நானே ஏன் படத்தில் நடிக்க கூடாது என்று நடித்த படம் தான் லத்திகா. பணம் இருந்த போது என்னுடன் பல பேர் இருந்தனர். அப்படி இருந்ததால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பணம் சென்ற பின்னர் அப்போது இருந்த யாருமே என் பின்னல் வரவில்லை என்று கூறினார்.

Advertisement

கடத்தல் கும்பல் :

மேலும் ஒருமுறை ஒரு கடத்தல் கும்பல் தன்னை கடத்தி படம் பற்றி பேசுவோம் என்று கூறினார்களலாம். அதற்கு பிறகு விசாரித்த போதுதான் தெரிய வந்துள்ளது தன்னை கடத்தியது வேறு யாரும் இல்லை தன்னுடைய உறவினர்கள் என்று தெரிவித்திருந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன். மேலும் இந்த பேட்டியில் தன்னுடைய வாழ்கையில் நடத்த சில குளறுபடிகள், பட வாய்ப்புகள் பற்றியும் அந்த வீடியோவில் பேசியிருந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

Advertisement