கொரோனா பரிசோதனைக்கு இவ்வளவு ஆயிரமா ? தனியார் மருத்துவமனை கொள்ளை அடிக்குறாங்க - அமலா பால் அதிர்ச்சி.

By Rajkumar · 3/10/2020

இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள்.

அதே போல கொரோனா பிரச்சனை ஆரம்பித்த நாளில் இருந்து பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை என்ற பெயரில் கொள்ளை அடிப்பதாக சில குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் கொரோனா பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கிறது என்று நடிகை அமலா பால் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர். ஒரு சில தனியார் மருத்துவ மனைகளில் கொரோனா சிகிச்சைக்கு லட்சக் கணக்கில் பணம் வசூலிக்கிறார்கள் என்பது குறிப்பித்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full