புதிய தலைமுறை டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியலில் பெயர் பெற்று தன் நடிப்பு திறமையால் மேயாதமான் படத்தின் மூலம் ஹீரோயினாக மாறி இருக்கும் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் பிரபலமான ஒரு சீரியல் ஆகும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வைபவ் நடித்த மேயாதமான் படத்திற்கு பின்னர், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார் ப்ரியா. இறுதியாக கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : போட்றா பிரேக்க.! பஸ் டே கொண்டாடிய மாணவர்கள்.! வைரலாகும் வீடியோ.!

Advertisement

அதன் பின்னர் கடந்த ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்க மிகவும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பவானி ஷங்கரிடம் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கதைக்கு மிக முக்கியம் என்றால் முத்தக்காட்சி கூட ஓகே தான், ஆனால், பிகினி சான்ஸே இல்லை’ என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறியுள்ளார்.

Advertisement

எஸ் ஜி சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ படத்தில் இவர் நடிக்கிறார் என்றதும் பலருக்கும் ஒரு ஷாக்காக இருந்தது. அதற்கு முக்கிய காரணமே எஸ் ஜே சூர்யா தனது கதாநாயகிகளிடம் எப்படி நடிப்பார் என்பது நியூ, அ ஆ போன்ற படங்களில் தான் நாம் பார்த்துள்ளோமே. ஆனால், அந்த படத்தில் தனது குடும்பப்பாங்கு கொஞ்சம் கூட கலையாமல் நடித்திருந்தார். ஆனால், தற்போது முத்தக்காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளது பிரியா பவானி சங்கரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement