விஜய் அண்ணாவோட எல்லாம் படத்தையும் இந்த ஒரு விஷயத்துக்காக மட்டும் பாப்பேன் ! ப்ரியா !
டீவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியலில் பெயர் பெற்று தன் நடிப்பு திறமையால் தற்போது மேயாதமான் படத்தின் மூலம் ஹீரோயினாக மாறி இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் பிரபலமான ஒரு சீரியல் ஆகும்.
மேயாதமான் படத்திற்கு பின்னர், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார் ப்ரியா. சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தல மற்றும் தளபதியைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது.
முக்கியமாக தளபதி விஜயைப் பற்றி நிறைய பேசினார் ப்ரியா, விஜய் சார் என்றாள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் அவரது நடனம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதற்காகவே அவரது படங்களை பார்க்க ஓடிவிடுவேன். அவரது டான்சிற்காகவே ஒவ்வொரு படத்தையும் விடாமல் பார்த்திவிடுவேன் எனக் கூறினார் ப்ரியா.