வளைவுகளில் முந்ததே,ஹெல்மெட் அணியவும் ,பாலத்தில் முந்ததே என்று எத்தனை முறை காவல் துறை அறிவுரித்தினாலும் நாம் கேட்பது இல்லை.ஆனால் சினிமா பிரபலங்கள் ஏதாவது சொல்லி விட்டால் போதும் அதுவே ரசிகர்களுக்கு வேத வாக்கு.அப்படி ஒரு யுத்தியை கை யாண்டு உள்ளது கேரளா காவல் துறை.

Advertisement

சமீபத்தில் வெளியான ஒரு ஆதார் லவ் என்ற ஒரே பாடல் மூலம் உலகளவில் பிரபலமானவர் கேரள பெண் பிரியா வாரியர்.இவரை பயன்படுத்தி பலரும் ஆதாயம் தேடி வந்த நிலையில் தற்போது கேரளாவில் சாலையில் நடக்கும் விபத்துகளை தவிர்க்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது கேரளா காவல் துறை .எப்படி என்று கேட்கிறீர்களா ??

சமீபத்தில் இவர் ஒரு ஆதார் லவ் பாடலில் செய்த அந்த கண் சிமிட்டும் காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமாகியது.தற்போது அவர் கண் சிமிட்டும் புகைப்படத்தை பயன்படுத்தி கண்சிமிடும் நேரத்தில் விபத்து நடந்து விடலாம் என்று விழிப்புணர்வு பதாகைகளை வைத்துள்ளது கேரளா காவல் துறை. இதனால் கேரளாவில் சாலைகளில் நடக்கும் விபத்துகள் குறையும் என்று நம்புகின்றனர்.இந்த புதிய முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதெல்லாம் சரி தான் ஒரு வேலை அந்த பதாகைகளை பார்த்துக்கொண்டே யாராவது விபத்துக்கள் பண்ணாமல் இருந்தால் சரி தான்.

Advertisement
Advertisement