வாடகை தாய் மூலம் பெட்ரா தனது மகளின் பெயரை அறிவித்து இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் சமீப காலமாகவே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று வரும் கலாச்சாரம் வாடிக்கையாகி வருகிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி ஜிந்தா போன்றவர்கள் ‘Surrogacy’ (வாடகை தாய்) மூலம் தாயான நிலையில் சமீபத்தில் பிரியங்கா சோப்ராவும் வாடகை தாய் மூலம் தாயாகி இருக்கிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார்.

இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் பல விளம்பரங்களில் நடித்து வந்தார். பிறகு 2000 ஆண்டில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்குபெற்று வெற்றியும் பெற்று மிகப்பிரபலமானார் பிரியங்கா சோப்ரா.அதனை தொடர்ந்து இவர் 2002 ஆண்டு மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.

Advertisement

பிரியங்கா – நிக் ஜோனஸ் :

மேலும், இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழன் படத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ரா பாலிவுட்டிலேயே தங்கிவிட்டார். தற்போது பிரியங்கா சோப்ரா அவர்கள் ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து உலக அளவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.இதனிடையே பிரியங்கா சோப்ரா அவர்கள் நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து வந்தார்.

இரு முறைப்படி நடைபெற்ற திருமணம் :

பின் இவர்கள் 2018 ஆம் ஆண்டு ஜோத்பூர் அரண்மனையில் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து மத சடங்குகளின் படியும் திருமணம் செய்து கொண்டார்கள். பிரியங்கா சோப்ரா இந்துமதத்தையும், நிக் ஜோனாஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெகு சிறப்பாக நடைபெற்ற திருமணத்தில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.அதோடு பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனஸ் 10 வயது சிறியவர். இதனால் இவர்களின் திருமணம் சமயத்தில் பலரால் பலவிதமாக பேசப்பட்டது.

Advertisement

வாடகை தாய் மூலம் குழந்தை :

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்று இருந்தார் பிரியங்கா சோப்ரா. இதுகுறித்து அறிவித்த அவர் “நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதி செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் குடும்பத்தில் கவனம் செலுத்துவதால், இந்த சிறப்பு நேரத்தில் தனியுரிமைக்காக நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம். மிக்க நன்றி.” என குறிப்பிட்டிருந்தனர்.

Advertisement

மகளின் பெயர் :

இப்படி ஒரு நிலையில் தன் மகளுக்கு மால்டி மேரி என பெயர் வைத்துள்ளனர்.  ‘மால்டி’ என்ற பெயர் சமஸ்கிருத வம்சாவளியைச் சேர்ந்தது மற்றும் சிறிய மணம் கொண்ட மலர் அல்லது நிலவொளி என்று பொருள்.மேரி லத்தீன் ஸ்டெல்லா மாரிஸ் என்பதிலிருந்து வந்தவர், அதாவது கடலின் நட்சத்திரம். இது இயேசுவின் தாயான மேரி என்ற பெயரின் பிரஞ்சு பதிப்பு என்பதால் இதற்கு விவிலியப் பெயரும் உள்ளது. பாரினரை திருமணம் முடித்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாலும் இந்திய கலாச்சாரத்தை மறவாமல் மகளுக்கு சமஸ்கிருத முறையில் பெயர் வைத்து இருக்கும் பிரியங்காவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement