பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட வயதில் குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜான்ஸ் என்பவரை காதலித்து வந்தார். நீண்ட காலமாக ரகசியத்தின் இருந்து வந்த இவர்களது காதல் வெளியுலகத்திற்கு தெரிந்த சில நாட்களிலேயே திருமணம் வரை சென்று விட்டது.
நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது. இதேபோல், கடந்த 2 ஆம் தேதி காலை, இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
இந்த திருமண நிகழ்ச்சியில் பல்வேறு திரை கலைஞ்சர்களும் பங்குபெற்றனர். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தால் தற்போது பீடடா அமைப்பால் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ராவின் திருமணத்தில் குதிரைகள் மற்றும் யானைகள் பயன்படுத்தபட்டதாக பீட்டா அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பீட்டா அமைப்பின் அதிகாரி தெரிவிக்கையில், திருமணத்திற்காக குதிரைகளும், யானைகளும் சங்கிலியால் கட்டபட்டுள்ளது. பல மக்களும் தங்கள் திருமணத்தில் விலங்குகளின் மீது சவாரி செய்வதை தவிர்த்து வருகின்றனர். என்று கூறியுள்ளார்.