இவன் என்ன பு***ன் ,என்ன கிழிச்சான்..!விஷாலை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர் அழகப்பன்..!

By Rajkumar · 20/12/2018

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அதன் தலைவர் நடிகர் விஷாலின் எதிர்தரப்பினர் சென்னை தியாகராயநகர் யோகாம்பாள் தெருவில் உள்ள சங்க அலுவலகத்துக்கும், அண்ணாசாலையில் உள்ள சங்க அலுவலகத்தையும் நேற்று பூட்டு போட்டு பூட்டினார்கள்.

தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்திற்கு எதிர்தரப்பு போட்ட பூட்டை உடைக்க முயன்ற நடிகர் விஷால் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையும் படியுங்க : தயாரிப்பாளர்கள் சங்க விவகாரம்..!பூட்டை அகற்ற சென்ற விஷால் அதிரடி கைது..!

பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நடிகர் விஷால் முடிவெடுப்பதாக கூறி விஷால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான அழகப்பன் நடிகர் விஷாலை கடுமையாக சாடியுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அழகப்பனிடம் 7 படம் வெளியாக இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் அலுவலகத்தை பூட்டியது தவறு என்று விஷால் கூறுகிறார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அழகப்பன் 7 படத்திற்காக அவன் என்ன பு**** கினான். இவன் என்ன கிழிச்சன்.

நேத்து வரை அவன் ஷூட்டிங்கில் இருந்தான். இப்போ மட்டும் ஏன் அவன் வாரான். பிரகாஷ் போன்ற நடிகர்கள் பிஸியான நடிகர்கள் ஏன் துணை தலைவராக இருக்கார்கள். முதலமைச்சராக இருந்தாலும் அணைத்து பிரச்சனைக்கும் முன்வர வேண்டும். இல்லை என்றால் மக்கள் செருப்பால் அடிப்பார்கள். விஷால் தலைவராக இருந்தலும் அவர் செய்த ஊழல் குறித்து அவர் பதில் சொல்லி ஆகவேண்டும். நாங்கள் ஒட்டு போட்டுள்ளோம். ஓட்டு போட்ட அனைவருக்கும் கேள்வி கேட்கும் உரிமை உண்டு.

சீமான் திருமுருகன் காந்தி போன்றவர்கள் முதலமைச்சரையும், பிரதமரையும் கேள்வி கேட்கிறார்களே அவர்களை ஏன் என்று கேட்க முடியுமா. அவர்கள் அனைவரும் ஓட்டுரிமை உள்ளவர்கள் அதே போல விஷாலுக்கு ஒட்டு போட்ட எங்களுக்கு அவரை கேள்வி கேட்க உரிமை உண்டு. அவர் ஒழுங்கா இருந்தா நாங்க ஏன் கேக்க போறோம். 7 மாதமாக சங்கம் பக்கமே வராதா அவர் பூட்டு போட்ட பின்னர் தான் வந்தார். ஒரு தலைவருக்கு சங்கத்தின் வரவு செலவு கூட தெரியாதா என்று ஆவேசமாக பேசியுள்ளார் அழகப்பன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full