நடிகர் விமல் மீது அடுத்தடுத்து புகார் எழுந்து வருவதால் அவருக்கு தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பிரபல தயாரிப்பாளரின் மகள் நடிகர் விமல் மீது பணமோசடி புகார் அளித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விமல். இவர் படங்களில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் சிறு நடித்து வேடங்களில் தான் நடித்து வந்தார். இவர் நடித்த பசங்க, களவாணி, கலகலப்பு போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த கோபி என்கிற சினிமா தயாரிப்பாளர் தான் விமல் மீது புகார் மனு கொடுத்துள்ளார். மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பது, களவாணி, களவாணி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் விமல் மன்னர் வகையறா படத்தை எடுத்தபோது என்னிடம் ஐந்து கோடி ரூபாய் கடன் வாங்கினார். மேலும், அந்த படத்தின் மூலம் வரும் லாபத்தில் பங்கு தருவதாகவும் என்னிடம் தெரிவித்தார். ஆனால், அவர் என்னிடம் வாங்கிய கடன் தொகை 5 கோடியை இதுவரை திருப்பி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார். நடிகர் விமல் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
தயாரிப்பாளர் மகள் :
இப்படி ஒரு நிலையில் தயாரிப்பாளரின் மகள் ஒருவரும் விமல் மீது புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் சேர்ந்த ஹேமா கணேசன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விமலின் மீது புகார் அளித்துள்ளார் அதில் அவர் விமல் ஒரு கோடியே 73 லட்சம் எம் தருவதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக கூறியிருக்கிறார். ஹேமா கணேஷ் என்பவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திருப்பூர் கணேசனின் மகள் ஆவார்.
கண்ணீருடன் பேசிய மேகா :
மன்னர்வகையரா படத்தின்போது தயாரிப்பாளராக திருப்பூர் கணேஷ், நடிகர் விமலை ஒப்பந்தம் செய்த முதல் கட்டமாக ஒன்றரை கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். ஆனால் சில காரணங்களால் திருப்பூர் கணேஷ் படத்தின் தயாரிப்பு பணியை ஓரம் கட்டிவிட்டார். ஆனால் மன்னர் வகையறா படம் வெளியானபோது திருப்பூர் காசு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி இருப்பதாக கூறி தயாரிப்பாளரின் மகள் கேமா கணேசன் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் :
அதுமட்டுமில்லாமல் ஏற்ப வைத்திருப்பவர்களுக்கு மன்னர்வகையரா படத்தின் தெலுங்கு உரிமையை முழு கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.ஆனால் அந்த உரிமையை தனது தந்தைக்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு வெற்றி பெற்று இருக்கிறார் என்றும் கூறினார்.இது தொடர்பாக விழுந்த விருகம்பாக்கத்தில் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் கங்காதரன் விமல் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் 2 கோடி வரை தன்னை 2 கோடி ரூபாய் வரை ஏமாற்றிவிட்டார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்திருந்தார்.
65 கோடி மோசடி :
அதற்கு முன்பாகவே திரைப்பட தயாரிப்பாளர் கோபி 65 கோடி ரூபாய் பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்டதாக மேல் மீது குற்றம் சாட்டியுள்ளார் அதன்பின் நடிகர் விமல் சென்னை காவல் ஆணையர் சிங்காரவேலர் கோபி ஆகியோர் தொடர்ந்து மிரட்டி வருவதாக புகார் அளித்துள்ளார் இப்படி கடந்த சில வாரங்களாகவே விமல் மீது மோசடி பண மோசடி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது இதற்கு விமல் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்