தன்னுடைய உடல் எடை அதிகரிப்பு குறித்து ரவீந்தர் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் ஹாட் டாபிக்காக சென்று இருந்தது பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன்- நடிகை மஹாலக்ஷ்மி திருமணம் தான். இவர்களின் திருமணம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர்.

இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 4ல் தான் இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது. இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த ஆண்டு நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரை சிரியலில் மிக பிரபலமான நடிகையாக மகாலக்ஷ்மி திகழ்ந்து வருகிறார். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தான் கேரியரை தொடங்கினார். பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து இருக்கிறார்.

Advertisement

ரவீந்தர் – மஹாலக்ஷ்மி திடீர் திருமணம் :

அதன் பின் இவர் சீரியலில் நடிக்க தொடங்கினார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கிறது. இவருக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வில்லியாக மிரட்டி வருகிறார். இப்படி ஒரு நிலையில் மஹாலக்ஷ்மி, தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு இருக்கிறார். இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்களுடைய திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது.

மேலும், இவர்களது திருமண செய்தி வெளியானத்தில் இருந்தே சமூக வளைத்தளத்தில் இவர்கள் திருமணம் கேலிக்கு உள்ளாகி இருந்தது. ஆனால், அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள். திருமணத்திற்கு பின் இருவரும் தங்களின் புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் ரவீந்தர் குண்டாக இருந்தும் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டதற்கு காரணம் பணம் தான் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், இவர்கள் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

Advertisement

ரவீந்தர் அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் ரவீந்திரர் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் உடல் எடை அதிகமானதற்கான காரணம் குறித்து கூறியிருந்தது, என்னுடைய உடல் எடை அதிகமாக இருப்பது பெரிய வித்தியாசமான விஷயம் எல்லாம் கிடையாது. எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். என்னுடைய உடல் எடை குறித்து கேள்வி கேட்பவர்கள் என்னவோ என்னை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டிருப்பது போலவே நினைக்கிறார்கள். எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கையில் அலர்ஜி வந்தது.

Advertisement

குண்டாக இருக்க காரணம்:

அதற்கு சிகிச்சை எடுக்கும் போது வந்த விளைவால் தான் இந்த உடல் எடை அதிகமானது. அதற்காக மாத்திரை எடுத்த போது உடல் எடை குறைக்கும் அந்த போதை உடம்பில் இருக்கும் கொழுப்பை குறைக்கும் செல்கள் இல்லாமல் போய்விட்டது. அதனால் தான் அந்தந்த வயதில் உடல் எடை அதிகரித்தது. இது தவிர பரம்பரையாக இருக்கும் வியாதி எல்லாம் எங்கு இல்லை. நான் டயட் எடுப்பது இல்லை. இன்று இது சாப்பிட வேண்டாம் என யோசித்தும் செயல்பட மாட்டேன். எனக்கு டயட் எடுத்தாலும் வொர்க் அவுட் ஆகவில்லை. என்னுடைய உடல் எடையை தூக்கிக் கொண்டு நடப்பது சாதாரண விஷயம் கிடையாது. நான் 200 கிலோ வெயிட்டை தூக்கிக் கொண்டு சுமந்து நடக்கிறேன் என்று கூறியிருக்கிறார்

Advertisement