நான் உயிரோடு தான் இருக்கிறேன்.! தூத்துக்குடி சுப்பிரமணியன் விடியோவால் பரபரப்பு.!

By Rajkumar · 19/2/2019

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஸ்மீரில் நடந்த தாக்குதலில் 40 இந்திய crpf வீரர்கள் பலியாகினர். இதில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர், சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசந்திரன் ஆகியோரும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரது இறுதி சடங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

https://www.facebook.com/commanclips/videos/394159964481264/

இந்நிலையில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் தூத்துக்குடி சுப்ரமணியன், தான் உயிரோடு இருப்பதாகவும் அது தெரியாமல் எங்க ஊர்காரர்கள் அனைவரும் நான் இறந்து போனதாக போஸ்டர் பேனர் ஒட்டியுள்ளனர் என்று பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க : ரஜினி கமல் எல்லாம் எங்கே இருகாங்க? தமிழக வீரர்களின் குடும்பத்தை நேரில் சென்று பார்த்த முதல் நடிகர்.! 

உண்மையில் இந்த வீடியோவில் இருப்பது உண்மையில் சுப்பிரமணியம் தானா. அப்படி இருந்தால் அவர் ஏன் இன்னும் அவரது வீட்டிற்கு தகவல் சொல்லவில்லை. ஒரு வேலை அவர் உயிரோடு இருக்கும் போது அவர் இறந்து விட்டதாக கூறியதற்கு அவர் இந்த விடியோவை வெளியிட்டாரா என்பது புரியாத புதிராக இருக்கிறது.

அதே போல இந்த வீடியோவில் இருக்கும் நபரும் காக்கி உடையில் இருப்பது தான் மேலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ ஒருவேளை சுப்பிரமணியன் உயிரோடு இருந்தால் அது நம் அனைவருக்கும் ஒரு மன நிம்மதியை அளிக்கும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full