தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதா கடந்த 1996ஆம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு கார்த்திகா விக்னேஷ் துளசி என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள் அதில் மூத்த மகளான கார்த்திகா தெலுங்கில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ஜூஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை என்ற விருதையும் பெற்றார்.

அதன் பின்னர் தமிழில் ஜீவா நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படத்தில் ஜீவாவின் ஜோடியாக நடித்திருந்தார் இந்த படத்திலும் இவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான விருதினையும் ஜெயாடிவி விருதினையும் பெற்றார் அதன்பின்னர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து வந்தார் கார்த்திகா கோ படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை.

இதையும் பாருங்க : யோகி பாபு மகனின் பெயர் சூட்டு விழா – முருகப்பெருமானின் பெயரை வைத்துள்ள யோகி பாபு. என்ன பெயர்னு பாருங்க.

Advertisement

அந்த படத்திற்கு பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அன்னக்கொடி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் ஜாக்கெட் அணியாமல் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இவர் நீச்சல் உடையில் நடித்திருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. என்னதான் பாரதிராஜா படத்தில் நடித்தும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த பாடில்லை. இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் இவருக்கு எந்த பட வாய்ப்பும் வரவில்லை.

பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல் பக்கம் கவனத்தைத் திருப்பினார் கார்த்திகா இந்தியில் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆரம்ப என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வந்தார்.அந்த சீரியலும் நான்கு மாதங்கள்தான் ஒளிபரப்பானது இதனால் சின்னத்திரையிலும் இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

Advertisement

பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது சினிமாவை விட்டு விலகி தனது தந்தை நடத்தும் ஓட்டல் தொழிலை கவனிக்க கார்த்திகா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவுல மூணு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களும், ஸ்கூல், சினிமா தியேட்டர், கல்யாண மண்டபம்னு நிறைய பிசினஸ் வேலைகளை ராதா குடும்பம் நடத்தி வருகிறது.

Advertisement
Advertisement