தமிழ் சினிமாவில் 80, 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை ராதிகா . இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் முதல் தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்குறார். சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார் ராதிகா. நடிகை ராதிகா அவர்களின் முதல் கணவர் பிரபல இயக்குனரும் நடிகருமான நடிகர் பிரத்தாப். இவரை 1985 ஆம் ஆண்டு ராதிகா திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன ஒரே ஆண்டில் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

அதன் பின்னர் ராதிகா லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ரேயான் என்ற மகளும் பிறந்தார். பின் ராதிகா அவர்கள் ரிச்சர்ட்டிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். பிறகு தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கும் நடிகர் சரத்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும், நடிகர் சரத்குமாருக்கு ஏற்கனவே முதல் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றார்.

Advertisement

ராதிகா இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சரத்குமார்– ராதிகாவின் மகள் ரேயான்க்கும், கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ராதிகாவின் மகள் ரேயான் தற்போது இரண்டாவது குழந்தைக்கு தாயாக உள்ளார். ரேயான் மற்றும் அபிமன்யு மிதுன் தம்பதியருக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் கடந்த வருடம் ரேயான் தாய்மை அடைந்த உருவத்தை பார்த்து பலரும் கிண்டல் அடித்து இருந்தார்கள். அதற்கு சமூக வலைத்தளங்களில் ராதிகா பதிலடி கொடுத்திருந்தார். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் ரேயான் அவர்கள் இரண்டாவது குழந்தைக்கு தாயாகி உள்ளார். இவருக்கு பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்கட்டும் என்று புகைப்படத்துடன் பிரபல நடிகை சுஜா வருணி தெரிவித்திருக்கிறார்.

Advertisement

நடிகை சுஜா வருணி பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும், சில படங்களில் ஐட்டம் டான்ஸர் ஆகவும் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் ஏற்படுத்தி தந்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். சொல்லப்போனால் மூன்றாவது சீசனில் கலந்துகொண்ட வனிதாவை போல இவரும் பிக் பாஸ் முதல் சீசனில் ஒரு சவுண்ட் பார்ட்டியாக இருந்து வந்தார்.

Advertisement

2018 ஆம் ஆண்டு இவருக்கும் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாருக்கும் திருமணம் நடைபெற்றது. மேலும், ராதிகா மகளின் வளைகாப்பில் நடிகை சுஜா கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும், தனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப்போவதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்போது நாங்கள் 4 பேர் ஆகிவிட்டோம் என்று குயூட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ரேயான்.

Advertisement