சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மழை மற்றும் அறிவிக்கப்படாத வெள்ளத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவும் பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

இந்த வேலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியும் கட்டுப்பாடு அறை அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது. அதே போல் பலதுறைகளைச் சார்ந்த தன்னார்வளர்களும் உதவினர்.

Advertisement


இன்று மதியம் மழை சற்று குறைந்து இருக்கும் வேலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னை காசி தியேட்டர் பின்புறம் இருந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்.

Advertisement