ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் ராகினி திவேதி. ‘ஆர்யன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
வீர மடகரி’ என்ற படத்தின் மூலம் 2008ல் கன்னட திரையுலகில் அறிமுகமான ராகினி, கன்னடம் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து வருபவர். காவேரி பிரச்னையின் போது தமிழகர்களுக்கு தண்ணி தர கூடாது என்று வீடியோ ஒன்றை கூட வெளியிட்டார்.
தற்போது கன்னடத்தில் 4 படங்களை கையில் வைத்துள்ளார். அதில் மூன்று படத்தின் பட பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகை ராகினி திவேதி கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.