இந்திய முன்னணி நடிகையான சமந்தா Myositis என்னும் Autoimmune நோய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் எடுத்துள்ள முடிவு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தா இயக்குனர் மேனன் இயக்கத்தில் வெளிவந்த “விண்ணைத்தேடி வருவாயா” என்ற திரைப்படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு கதாநாயகர்களுடன் ஒரே நேரத்தில் அவர்களின் திரைப்படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து பானா, நான் ஈ, அஞ்சான், கத்தி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சம்ந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா அந்த “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த “காத்துவாக்குல ரெண்டு” காதல் என்ற படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தா நடித்திருந்தார். இவர் இந்தி திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் இந்தியிலும் இவருக்கு அதிக ரசிகரக்ள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில் சமந்தா திடீரென சோசியல் மீடியாக்களில் பதிவுடுவதை தரவிர்த்து வந்தார். இதனால் ரசிகர்கள் எந்த காரணத்திற்காக சமந்தா இப்படி நடந்து கொள்கிறார் என்றிருந்த நிலையில் தனக்கு Myositis என்னும் Autoimmune தன்னை தாக்கியுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை தற்போது எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார். அதே போல “யாசோதா” படத்தின் டப்பிங்கிலன் போது கூட மருத்துவமனையில் இருந்துதான் டப்பிங் செய்தார் என்பது குறிபிடத்தக்கது.

தற்போது மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ள சமந்தா அவரது சொந்த ஊரில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்பட்டது. மேலும் தென் கொரியாவுக்கு சென்று சிகிச்சை எடுக்க உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை சமந்தாவின் உடல் நிலை தொடர்ந்து மோசமாகிக்கொண்டே செல்வதினால் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார். அது தன்னுடைய உடல் முழுவதுமாக குணமாகும் வரை தான் எந்த படத்திலும் நடிக்க போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.

Advertisement

இவர் நடித்திருந்த “தி பேமிலி மேன் சீசன் 2டிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து மேலும் படங்களில் நடிப்பதற்கு சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால் சமந்தா தற்போது எடுத்துள்ள முடிவினால் தான் நடிக்கப்போவதில்லை என்று அடுத்து நடிக்கவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு தொலைபேசியின் மூலம் நேரடியாக கூறியுள்ளார். இதனால் அந்த பட தயாரிப்பாளர்கள் வேறு நடிகைகளை தேடி வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் சமந்தாவின் உடல் நிலைக்கு ஆறுதல் கூறி சின்மயின் கணவரும் இயக்குனருமாந ராகுல் பதிவு ஒன்றை பகிர்ந்து இருந்தார்அதில் ‘எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நீ போராடிக்கொண்டே இருப்பாய். இன்னும் இன்னும் போராடிக்கொண்ட இருப்பாய். ஏனென்றால் நீ ஒரு இரும்புப்பெண் உன்னை எதுவும் தோற்கடிக்காது. கஷ்டப்படுத்தாது. மாறாக அவை உன்னை இன்னும் சக்தி வாய்ந்தவளாக மாற்றும்’ என்று கூறி இருந்தார். இதற்க்கு பதில் அளித்த சமந்தா ”’நன்றி ராகுல், யாராவது தங்கள் வாழ்க்கையில் போரோடுகிறார்களோ அவர்களுக்கு இதனை சொல்லிக்கொள்கிறேன். போராடிக்கொண்டே இருங்கள். நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள். இன்னும் திடமாக மாறி கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள்’ என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement