உச்சநீதிமன்ற தீர்ப்பால் மீண்டும் நாடாளுமன்ற வருகை தந்த ராகுல் காந்தி எம்.பி – உற்சாகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்.

By S.Dhilip Kumar · 7/8/2023

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்ததையடுத்து அவருக்கு 5 மாதங்கள் பிறகு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர் இன்று 12 மணிக்கு நாடாளுமன்றத்திற்கு சென்றார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாலம்பூரில் நடைபெற்ற மக்களைவை தேர்தலில் அவர் “எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவைகிறது” என்றார்.

இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சு ஒரு சமூகத்தினரை இழிவு படுத்துவதாக கூறி பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மார்ச் 24-ம் தேதி சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருட சிறை தண்டனையை வழங்கியது. மேலும் இவரின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இந்த தண்டனயை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி குஜராத் நிதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் குஜராத் நிதிமன்றம் அதை நிராகரித்தது. உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பிக்கு இடைக்கால தடையை விதித்தது. உச்சநீதிமன்றத்தில் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

இதில் அவரின் பேச்சுக்கள் ரசிக்கும் படி இல்லையென்றும், சமுக பொறுப்பில் உள்ளவர்கள் அவ்வாறு பேசியிருக்க கூடாது கவனமாக பேச வேண்டும் என்றும் இந்த வழக்கில் அதிகபட்ச இந்த வழக்கில் அதிக பட்ச இரண்டு வருட தண்டனை விதிக்கப்பட்டது கூறித்து எந்த சிறப்பு காரணமும் நீதிமன்றம் குறிப்பிடவில்லை என்றும் இறுதி தீர்ப்பு வரும் வரை வழக்கை நிறுத்தி வைக்க படவேண்டும் என்றனர்.

மேலும் “ராகுல் காந்தியின் தகுதி இழப்பால் விரைவில் இடைதேர்தல் வைக்க கூடும் என்றும் அவரால் நாடாளுமன்றத்தில் பங்கேற்க முடியவில்லை என்றும் எனவே 2 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடைவிதிக்க கோரிக்கை வைக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அதனால் அவருக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்டு இருந்தது.            

மீண்டும் ராகுல் காந்தியின் நாடளுமன்ற வருகை

அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்க பட்டது அதன் அரசு வீட்டை காலி செய்ய வேண்டும் என்று பல்வேறு இன்னல்களில் இருந்து தற்போது புத்துணர்ச்சியாக இருந்து வருகிறார். தகுதிநீக்க உத்தரவு திரும்பப் பெற்ற நிலையில் இன்று 12 மணியவில் இன்று மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் ராகுல் காந்தி.

எதிர் கட்சிகளின் அமளியால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றதிர்ற்கு வருகை தந்தார். அவருக்கு அவரின் தொண்டர்கள் சிறப்பான வரவேற்ப்பை அளித்தனர். நாடாளுமன்றம் வந்த அவர் அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பின் நாடாளுமன்றதிற்கு அவர் சென்றார்.     

Tamil Behind Talkies AMP · Quick view
View full