இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி.இவர் இந்தியாவிற்கு உலகக்கோப்பைகளை பெற்று தந்ததுமில்லாமல் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகவும்,உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்கின்றார்.
உலகம் முழுதும் பலகோடி ரசிகர்களை பெற்றுள்ளவர் டோனி.ஐபிஎல் டி20 போட்டியில் பங்கேற்கும் போது நடிகை ராய் லட்சுமியுடன் காதலில் இருந்ததாக அப்போது ஒரு செய்தி வைரலாக பரவி வந்தது.

தற்போது ஜுலி-2 என்ற படத்தில் ராய்இலட்சுமி நடித்துள்ளார்,இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்காக வட இந்திய பத்திரிகையாளர்களை சந்தித்து வருகின்றார்.ஒரு பேட்டியில் தோனியுடனான காதல் குறித்த கேள்வியெழுப்ப,
“அதெல்லாம் பழைய நினைவுகள்,தற்போது அவருக்கு சாக்ஷியுடன் திருமணமாகி,அழகான குழந்தை உள்ளது.அதைப்பற்றி தற்போது பேச வேண்டாம்.
அவர் அவருடைய குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழவேண்டுமென்று வேண்டிக்கொள்கின்றேன்.அவர் மீது நான் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement