நஷ்ரியாவைப் போலவே இருக்கும் வர்ஷா பொல்லம்மா, கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு தமிழில் நன்றாக பேசவும் எழுதவும் தெரியும். ஒரு நாள் போர் அடித்து ராஜா ராணி படத்தின் நஷ்ரியா டைலாக்கை டப்ஸ்மேஷ் செய்து வெளியிட்டிக்கிறார். அது உடனடியாக ஃபேஸ்புக், வாட்சாப், இண்ஸ்டகிராம் வைரலாகி பல மில்லியன் வியூக்கல் சென்றது.
பார்ப்பதற்கு நஷ்ரியாவைப் போலவே இருப்பதாலும், அவருக்கு பட வாய்ப்புகளும் வரத் துவங்கிவிட்டது. எல்லாம் அந்த ஒரு டப்ஸ்மேஷ் செய்த வேலை தான். இதனால் தற்போது தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார் வர்ஷா. ஏற்கனவே யானும் தீயவன் படத்தில் நடித்துவிட்டார். தற்போது சீமைத்துறை உள்ளிட்ட மூன்று தமிழ் படங்கள் அவரதுகையில் உள்ளது. அவருக்கு ஜோடியாக கீதன் நடித்துள்ளார். அவரது ஆசை நஷ்ரியாவை சந்த்தித்து அவருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்படுகிறார் வர்ஷா பொல்லம்மா.

‘ஒருநாள் போர் அடித்துப் போய் ராஜா ராணி நஷ்ரியா டைலாக்கை டப்ஸ்பேஷ் செய்து பதிவிட்டேன், காலையில் எழுந்து பார்ப்பதற்குள் பல லட்சம் வியூ சென்றுவிட்டது, திடீரென பேஸ்புக், வாட்சப்பில் எல்லாம் என்னுடைய டப்ஸ்மேஷ் வர ஆரம்பித்துவிட்டது’என மனம் நெகிழ கூறுகிறார் வர்ஷா.

Advertisement
Advertisement