இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் இளைய தளபதி விஜய் கூட்டணி 3 வது முறையாக இணைந்து ஒரு படத்தை எடுத்து வருகின்றனர். நீண்ட நாட்களாக இந்த படத்தின் பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சீரியல் நடிகை வைஷாலி தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்று “ராஜா ராணி ” இதில் கதநாகனாக நடித்து வரும் கார்த்திக்கின் தங்கையாக நடித்து வந்தவர் சீரியல் நடிகை வைஷாலி. இவர் இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிளை சீரியலிலும் நடித்து வருகிறார்.
ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் இவர் சமீபத்தில் ஏற்பட்ட உடல் நல குறைவு காரணத்தால், அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். இருப்பினும் தான் படங்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் “சீமராஜா” படத்திலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் படத்தில் நடித்த அனுபவம் குறித்து தெரிவித்த அவர் ” விஜய் 62 படத்தில் விஜயுடன் நடித்துள்ளது மிகுந்த மகழ்ச்சியளிக்கிறது. இந்த படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்த விஜய், நீங்கள் நன்றாக நடிகிறீர்கள் என்று பாராட்டினார்,அதை கேட்டு எனக்கு மிகவும் மகழ்ச்சியாக இருந்தது. மேலும் இந்த படத்தின் இயக்குனர் முருகதாஸும் என்னுடை நடிப்பை பாராட்டி இருந்தார் ” என்று தெரிவித்திருந்தார்.