சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “பேட்ட” படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் “2.0” படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது “பேட்ட ” படத்தின் படப்பிடிப்பில் பங்குபெற்று இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த.

Advertisement

இந்த படத்தில் முதன் முறையாக நடிகை த்ரிஷா சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்கவிருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலத்திற்கு இந்த படத்தின் படப்பிடிப்புகள் லக்னோவில் தான் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நல்லரவில் சென்றுள்ளார். அதே போல நடிகை த்ரிஷாவும் அந்த கோவிலுக்கு சென்ற புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement
Advertisement