எந்திரன் போஸ்டரில் இதை கவனித்தீர்களா..? நீங்கள் கவனிக்க மறந்த விஷயம்.! என்ன தெரியுமா..?

By Ajju · 11/7/2018
இயக்குனர் ஷங்கரின் "ஐ" படத்திற்கு பிறகு பிரமாண்ட பொருட்ச் செலவிவில் உருவாகி வரும் படம் "2.0" எந்திரன் படத்தின் 2 ஆம் பாகம் என்று கூறப்படும் இந்த படத்தில் ஐ படத்தில் நடித்த எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துக்கள்ளர். அது போக முதன் முறையாக தமிழ் சினிமாவில் விஜயமாகியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இந்த படம் வரும் தீபாவளிக்கும் வெளியாகும் என்று ஏதிர்பார்க்கபட்டது.ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் தரத்திற்கு இணையாக உருவாகியுள்ள இந்த படத்தில் அக்ஷய் குமார் ஒரு பறவை வேடத்தில் இருப்பதுபோல போஸ்டர்களும் வெளியானது. அதே போல இந்த படத்தின் கதையும் பறவைகளை சம்மந்தப்பட்ட கதை தான் என்று ஒரு சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் செல்போன் டவர்களால் சிட்டுக்குருவி போன்ற அறிய பறவை இனங்கள் அழிந்து வருகிறது என்று வன ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றாரனர். அப்போது திடீரென்று ஒரு பறவைக்கு மாபெரும் சக்தி கிடைத்து விடுகிறது. அந்த பறவை தான் அக்ஷய் குமார், அக்ஷய் குமாருக்கும் ரஜினிக்கும் இடையே நடக்கும் சண்டைதான் கதை கரு. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் மற்றுமொரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் நீங்கள் நன்றாக உற்று பார்த்தாள் பல செல்போன்களும், பறவைகளும் இருக்கும் உருவங்களை பயன்படுத்தி தான் இந்த போஸ்டரை உருவாக்கியுள்ளனர். எனவே, ஏற்கனவே வெளியான தகவலின்படி இந்த படம் வளர்ந்து வரும் விஞ்ஞானத்திற்கும், இயற்கைக்கும் நடக்கும் ஒரு யுத்தமாக இருக்கும் கதையாக தான் இருக்கும் என்று உறுதியாகியுள்ளது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full