தமிழ் சினிமா உலகின் பழம்பெரும் நடிகர் சக்கரவர்த்தி இன்று காலமாகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 80 காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் சக்கரவர்த்தி. இவர் தமிழகத்தில் பெரியகுளத்தில் பிறந்தவர். இவர் 1975 களின் பிற்காலத்தில் தான் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அதற்கு முன் இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் சிவாஜி, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. இதனால் இவரும் தமிழ் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும், இவர் ஆறிலிருந்து அறுபதுவரையில், ரிஷி மூலம், முள்ளில்லாத ரோஜா, தர்மயுத்தம், தூக்குமேடை, தைப்பொங்கல், கொட்டு முரசே, நூலறுந்த பட்டம் உட்பட 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Advertisement

சக்ரவர்த்தியின் திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இவருடைய நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கியிருக்கிறார். பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் சக்ரவர்த்தி மும்பைக்கு சென்று செட்டில் ஆகி விட்டார். இவர் ஏற்கனவே தமிழ் உச்சரிப்பில் புகழ் பெற்றவராக இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவருடைய கணீர் குரலுக்காக பலரும் பாராட்டி இருந்தார்கள். இதனால் இவர் மும்பையில் டப்பிங் ஸ்டுடியோவை நிறுவினார்.

சக்ரவர்த்தியின் டப்பிங் ஸ்டுடியோ:

அதில் இவர் பல தமிழ் படங்களுக்கு ஹிந்தியில் டப்பிங் செய்யும் பணியையும், ஹிந்தி படங்களுக்கு தமிழில் டப்பிங் செய்யும் பணியையும் செய்து வந்தார். அதோடு இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவர் லலிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சசிகுமார், அஜய்குமார் என்ற 2 மகன்களும் உள்ளனர். இவருடைய மகன் சசிகுமார் மும்பை விப்ரோ கம்பெனியில் பணியாற்றுகிறார்.

Advertisement

சக்ரவர்த்தி குடும்பம்:

அஜய்குமார் எம்எஸ்சி படித்து வருகிறார். மேலும், இன்றும் இவருடைய பாடல்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டு தான் வருகிறது. அதிலும் தைப்பொங்கல் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்றுவரையிலும் மறக்க முடியாத ஒரு நடிகராக சக்கரவர்த்தி இருக்கிறார். இந்நிலையில் நடிகர் சக்ரவர்த்தி காலமாகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இன்று காலை சக்கரவர்த்தி தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

Advertisement

சக்ரவர்த்தி திடீர் மரணம்:

அவருடைய மனைவி நீண்ட நேரம் எழுப்பியும் அவர் எழாததால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் தூக்கத்திலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இவருக்கு 62 வயது தான் ஆகிறது. நடிகர் சக்ரவர்த்தியின் திடீர் மரணம் தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர் காலமான செய்தி சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement