அவர் தட்டுனா ஜீப் பறக்கும் ஆனா, நம்ம செஞ்சா ஒத்துக்க மாட்டாங்க என்று நிகழ்ச்சியில் ரஜினி கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். கோலிவுட்டில் இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.

இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

Advertisement

ரஜினி நடிக்கும் படங்கள்:

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ரஜினி அவர்கள் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. அதில் ஒன்று, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ரஜினி நடிக்கும் படங்கள்:

இந்த படத்திற்கு லால் சலாம் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இன்னொரு படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்புகள் எல்லாம் அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது. இப்படி தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி பிஸியாக ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா குறித்து ரஜினி கூறி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

பாலகிருஷ்ணா குறித்து ரஜினி சொன்னது:

அதாவது, சமீபத்தில் நடந்த என் டி ராமராவ் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு இருந்தார். அதில் அவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா குறித்து கூறியிருந்தது, அவர் தட்டினால் ஜீப் 20- 30 அடி தள்ளிப் போய் விழும். இதே நான், அமிதாபச்சன், ஷாருக்கான், சல்மான்கான் செய்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருந்தார். இப்படி ரஜினிகாந்த் கூறியது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பற்றி தான்.

Advertisement

பாலகிருஷ்ணா திரைப்பயணம்:

தெலுங்கு சினிமாவில் பல ஆண்டு காலமாக மிகப் பிரபலமான நடிகராக கொடிகட்டி பறப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என் டி ராமாராவ் அவர்களின் ஆறாவது மகன் தான் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

Advertisement