ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அருணாச்சலம் படத்தின் போது சுந்தர் சிக்கு ரஜினி கொடுத்த டுவிஸ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். கோலிவுட்டில் இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இன்னும் சில படங்களில் ரஜினிகாந்த் கமிட் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் ரஜினியின் அருணாச்சலம் படம் குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த படம் அருணாச்சலம்.

Advertisement

அருணாச்சலம் படம்:

இந்த படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் சௌந்தர்யா, ரம்பா, மனோரமா, வடிவுக்கரசி, செந்தில், ரகுவரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். தேவா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது. ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான் என்ற டயலாக்கின் மூலம் இளைஞர்களை தன் பக்கம் கட்டி போட்டார் ரஜினி. மேலும், இந்த படம் திரையரங்கில் 175 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை படைத்திருந்தது. பொதுவாகவே, சுந்தர் சி படம் என்றால் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லலாம்.

படத்தின் வசூல்:

அதேபோல் அருணாச்சலம் படத்திலும் சுந்தர் சி நகைச்சுவையை கையாண்டிருந்தார். இதுவே இவருடைய மாபெரும் வெற்றிக்கு காரணம் என்று சொல்லலாம். இந்த படம் உலக அளவில் 32.71 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதிலும் இந்தியாவில் 25.55 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. வெளிநாட்டில் மட்டும் ஏழு கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்ததாம். மேலும், இந்த படத்தை ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த பேனரில் தயாரித்தார். இந்த படத்தின் மூலம் அவருடன் பயணித்த எட்டு கலைஞர்களுக்கு உதவும் வகையில் இந்த படத்தை தயாரித்து இருந்தார் ரஜினி. ரஜினியின் இந்த செயல் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது.

Advertisement

படத்தின் டைட்டில் உருவான விதம்:

இந்த நிலையில் மாபெரும் ஹிட் கொடுத்த ரஜினியின் அருணாச்சலம் படத்தின் தலைப்பு குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் தான் வைரலாகி இருக்கிறது. அதாவது, இந்த படத்திற்கு முதலில் அருணாச்சலம் என்று தலைப்பு வைக்கவில்லை. சுந்தர் சி குபேரன் என்று தான் பெயர் வைத்தார். இந்த டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னே கசிய தொடங்கியது. இதனால் படக்குழுவும் ரஜினிகாந்த்தும் வேறு ஒரு டைட்டிலை வைக்க முடிவு செய்தார்கள். அதற்குப் பின் ரஜினிகாந்த் இயக்குனர் சுந்தர் சியை அழைத்து சூப்பர் டைட்டில் ஒன்று யோசித்து வைத்திருக்கிறேன் வீட்டுக்கு வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement

படத்தை கொண்டாடும் ரசிகர்கள்:

அப்போது ரஜினி சாரோட நண்பர் ஒருவர் படம் சூப்பர் டைட்டில் சார் என்று சொன்னார். என்ன என்று சுந்தர் சி கேட்டதற்கு அருணாச்சலம் என்று சொன்னார். உடனே அவர், என்ன அருணாச்சலம், வேதாச்சலம் நல்லாவே இல்லை என்று சொல்லி ரஜினி சாரை சென்று பார்த்தார். அப்போது ரஜினி படத்தின் டைட்டில் அருணாச்சலம் என்று சொன்னார். அவருடைய தோணியில் சொன்னவுடன் சுந்தர் சிக்கு டைட்டில் மிகவும் பிடித்து விட்டது. உடனே செய்தியாளர்களை சந்தித்து படத்தின் டைட்டிலை வெளியே சொல்லி விட்டார்கள். இப்படி இந்த படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறது. இதை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement