இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா, முனிஷ் ராஜாவை பிரிந்த காரணம் குறித்து பேசி இருக்கிறார். ராஜ்கிரண் மகள் பிரியா- முனீஸ்ராஜா இருவரும் பிரிந்து இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ராஜ்கிரன். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சமீப காலமாக இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் பிரியா சின்னத்திரை நடிகர் முனீஸ்ராஜாவை திருமணம் செய்து இருந்தது சோசியல் மீடியாவில் சர்ச்சையாக பேசப்பட்டிருந்தது.

நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவுக்கும் முனீஸ் ராஜாவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆரம்பத்தில் இரண்டு பேருடைய வீட்டிலும் இவர்களுடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.இருந்தாலும், இவர்கள் காதலித்துக் கொண்டு தான் வந்தார்கள். பின் இவர்கள் பெற்றோர்களை மீறி ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டார்கள். முனீஸ்ராஜா வீட்டில் இவர்களுடைய திருமணத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர். அதே நேரம் ராஜ்கிரன் அவரின் மனைவி மட்டும் இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

Advertisement

அதையும் மீறி ஜீனத் பிரியா, முனீஸ் ராஜாவை திருமணம் செய்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்களின் திருமணம் நடந்தது. இதனை தொடர்ந்து ஜீனத் என் மகளே இல்லை என்று ராஜ்கிரண் கோபமாக தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் முனிஷ் ராஜாவை பிரிந்துவிட்டதாகவும், தங்கள் திருமணம் சட்டப்படி நடக்கவில்லை என்றும் கூறி அதிர்ச்சியை கொடுத்தார் ஜீனத். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார்.

அதில் ‘என் தந்தை எவ்வளவோ சொல்லியும் நான் கேட்காமல் திருமணம் செய்தேன். இன்று நான் அனுபவிக்கிறேன். திருமணமான கொஞ்ச நாளில் அவரின் சுய ரூபம் தெரிந்தது. அவரை விட்டு பிரிந்துவிடலாம் என்று யோசித்த போதெல்லாம் அவர் என்னை சார்தவர்களையும் என் அம்மாவையும் அசிங்கப்படுத்துவேன் என்று மிரட்டினார். அதனால் நானும் பொறுத்துக்கொண்டு வாழ்ந்து வந்தேன்.

Advertisement

மேலும், அவர் நன்றாக குடிப்பார். குடித்துவிட்டு என்னை அடிப்பார். ஒரு கட்டத்தில் அவருடன் என்னால் வாழ முடியவில்லை அதனால் பிரிந்து வந்துவிட்டேன். அப்போதும் எனக்கு போன் செய்து மிரட்டி கோடிக்கணக்கில் பணம் கேட்டார். மேலும், நான் தேவர் இல்லை என்ன ஜாதி என்றெல்லாம் கேட்டார். என் கல்யாணம் சட்டப்படி ஆகவில்லை என்று நான் சொன்னதுக்கு காரணம் அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது.

Advertisement

என்னை திருமணம் செய்த போதே நம் திருமணம் சட்டப்படி பதிவு செய்ய முடியாது என்று சொன்னார். 2021ஆம் ஆண்டே தாரணியை கல்யாணம் செய்துவிட்டேன். அவளை விவகாரத்து செய்யாமல் நம் திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்று என்னிடம் கூறினார். மேலும், அவரை ஏன் பிறந்தார் என்பது எனக்கு தெரியாது. நான் முடிந்த வரை பொறுத்துவிட்டேன். கண்டிப்பாக இனி அவரை சும்மா விட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement