நடிகையின் வருங்கால கணவரை நடு ரோட்டில் தாக்கிய பாடகரின் மேலாளர்.!வீடியோ இதோ.!
பாலிவுட்டில் சர்ச்சைக்கு பெயர் போனவர் ராக்கி சவாந்த். வருடம் முழுவதும் இவரது பெயர் எங்காவது ஒரு இடத்தில் அடிப்பட்டுக்கொண்டே இருக்கும். பிரபல டிவி தொகுப்பாளர் தீபக் காலால் என்பவருடன் டிசம்பர் 31 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தார்.
https://twitter.com/Bhootnath18/status/1085251777564336129
ஆனால், அவர் சொன்னபடி திருமணம் எதுவும் நடைபெறவில்லை. ராக்கி சாவந்த் திருமணம் செய்துகொள்ள போவதாக இருந்த தீபக் காலால் என்பவர் அடிக்கடி சமூக வளைத்தளத்தில் கேவலமான சில பதிவுகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் இந்தியின் பிரபல ரேப் பாடகர் ஃபாசல்புரியாவின் மேனேஜர் தீபக் நந்தால், ராக்கி சவாந்த்தின் வருங்கால கணவர் தீபக் சஹாலை குருகிராமில் சாலையோரம் வைத்து தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. தீபக் கலால் சமூக வலைதளங்களில் மோசமாக போஸ்ட் போடுவதாகக் கூறி அவரை நந்தால் அடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.