தமிழில் காதல் அழிவிதில்லை என்ற படத்தில் அறிமுகமான சார்மி அதன் பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் தெலுங்கு சினிமாவில் நடிகை சார்மிக்கு எக்கச்சக்க மவுசு ஏற்பட்டு அங்கே பல படங்களில் நடித்து விட்டார். சமீப காலமாக படங்களில் நடிப்பதில் முற்று போட்ட சார்மி தற்போது பூரி ஜெகன்நாத்துடன் சேர்ந்து தாயரிப்பு கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராகவும் , தயாரிப்பாளாகவும் பல ஆண்டுகளாக இருந்து வருபவர் பூரி ஜெகன்நாத். மேலும் தெலுங்கில் போக்கிரி, பிசினஸ் மேன் போன்ற படங்களை இயக்கிய இவருக்கு நடிகை சார்மியுடன் கள்ள தொடர்பில் இருப்பதாக சில மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : உடல் எடை குறைத்ததால் நடிகர் ராணாவிற்கு ஏற்பட்ட பாதிப்பு.! 

Advertisement

இதனை பற்றி சமீபத்தில் விளக்கம் கொடுத்த சார்மி “நான் நிறைய படங்களில் நடித்து விட்டேன் , தற்போது எனது வாழ்கையை சௌகர்யமாக வாழவே தற்போது நான் பூரி ஜெகநாதனுடன் சேர்ந்து ஒரு தயாரிப்பு கம்பெனி ஒன்றை தொடங்கியயுள்ளேன், ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்தால் காதலிப்பதாக என்று அர்த்தம் ஆகிவிடாது, அவருக்கும் எனக்கும் எந்த விதமான காதலும் கிடையாது “என்று தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் சார்மி மற்றும் ராம் கோபால் வர்மா தயாரிப்பில் பூரி ஜகன்நாந்த் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இஸ்மார்ட் சங்கர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வெற்றியை முன்னிட்டு சக்ஸஸ் பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

இந்த ராம் கோபால் வர்மா தலையில் பீரை ஊற்றிக்கொண்டு ஆட்டம் போட்டுள்ளார். மேலும், ராம் கோபால் வர்மா சார்மிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. ஐஸ்மார்ட் பார்ட்டி செமயாக நடந்திருக்கிறது போன்று. இப்படித் தான் பார்ட்டியில் ஆட்டம் போடுவீர்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisement

Advertisement