கேக்காம எடுத்தா பறக்குமானு கேட்டுடாதீங்க.!சிவகுமார் குறித்து பேசிய முதல் நடிகர்.!

By Rajkumar · 8/2/2019

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற நடிகர் சிவகுமார், தன்னிடம் செல்பி எடுக்க வந்த நபரின் செல் போனை தட்டி விட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனால் சிவ குமார் மீது பல்வேறு விமர்சனங்களை எழுந்தது. 

இந்த விவகாரத்தை அடுத்து நடிகர் சூர்யாவும் விளக்கமளித்து வருத்தம் தெரிவித்தார். பின்னர் செல் போனை இழந்த அந்த இளைஞருக்கு சிவகுமார் சார்பில் புதிய போன் ஒன்றும் கொடுக்க பட்டது. இருப்பினும் சிவகுமாரை வைத்து பல மீம்களை தெறிக்கவிட்டனர்.

இதையடுத்து மீண்டும் இது போன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார் சிவ குமார். முன்னை போலவே நிகழ்ச்சி ஒன்றில் சென்றுள்ள சிவகுமாரிடம் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முன்றபோது அந்த நபரின் செல் போனை தட்டிவிட்டுள்ளார் சிவகுமார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://twitter.com/thilak_ramesh/status/1093542658184687621

சிவகுமாரின் இந்த செயலுக்கு பல்வேறு நபர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பிரபல காமெடி நடிகர் ரமேஷ் திலக் சிவகுமாருக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், உங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்கலாமானு கேட்டா செல்போன் ஏன் பறக்கபோகுது...மனுஷன்தானே. (அப்போ கேக்காம எடுத்தா பறக்குமானு கேட்டுடாதீங்க பிரதர்) என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full