ராஜமுருகன் என்ற இயக்குனரின் அற்புத படைப்பான ஜோக்கர் திரைப்படம் 2016 இல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த காலத்தில் உள்ள அரசியல் வாதிகளையும்,ஊழல் அதிகாரிகளையும் தைரியமாக எதிர்க்கும் ஒரு பாடமாக அமைந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக வரும் மல்லிகா என்ற கதா பாத்திரத்தில் நடித்தவர் தான் ராம்யா பாண்டியன்.
1990 இல் திருநெல்வேலியில் பிறந்தார்.பின்னர் திருநல்வேலியில் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்பை நிறைவு செய்தார். இவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமான படம் டம்மி தப்பாசு என்ற படம் தான்.
அந்த படத்திற்கு முன்பே மானே தேனே பொன் மானே என்ற குறும்படத்திலும் நடித்திருக்கிறார்.தேசிய விருது வாங்கிய படத்தில் நடித்த நடிகைகே சினிமாவில் வாய்ப் பில்லாதது கொஞ்சம் வருந்ததக்க விஷயம் தான். ஜோக்கர் படத்தில் ஒரு கிராம பெண்ணாக இருந்த இவர் நேரில் பார்த்தால் ஒரு மாடர்ன் மயிளாக மிகவும் அழகாக இருக்கிறார்.
அதிலும் கடந்த சில காலமாக அம்மணி புடவைகளில் இருக்கும் சில சொக்க வைக்கும் போஸ்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர அம்மணி ட்ரெண்டிங்கில் வந்துவிட்டார். நடிப்பு ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் அம்மணியின் எடுப்பு நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.