தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பபடும் ஒரு நடிகர் என்றால் அது சந்தேகம் இல்லாமல் விஜய் சேதுபதியாக தான் இருக்கும். இவருடன் நடிக்க பல நடிகைகள் காத்துக்கொண்டிருக்க நடிகை ரஷி கண்ணாவிற்கு மட்டும் அந்த ஆசை போய் விட்டதாம்.

தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாணவர் நடிகை ரஷி கண்ணா. அதன் பின்னர் சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘அடங்கமறு ‘படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். நடித்திருந்தார்.

Advertisement

தன் பட அனுபவங்கள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில்…. “இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி இரண்டு பேர் உடனும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அனுராக், அதர்வாவுடன் தான் நடித்தேன். விக்ரம் வேதா பார்த்ததில் இருந்து விஜய்சேதுபதியுடன் நடிக்கவேண்டும் என்று ஆசை வந்துவிட்டது.

அதே போல் அட்லீயுடைய தெறி, மெர்சல் ரெண்டு படங்களும் பார்த்தேன். விஜய் – அட்லீ காம்பினே‌ஷனில் ஒரு படம் நடிக்கவேண்டும் என்பது தற்போதைய ஆசையாக உள்ளது” என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
Advertisement