தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி இந்தி, மலையாளம், கன்னட ஆகிய பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகன். இவர் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார்.

தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து உள்ளார். மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கல்லூரி மாணவியாக நடித்து உள்ளார். இந்த படத்தில் விஜய் அவர்கள் பேராசிரியாக நடித்து உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார்.

Advertisement

சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக முடிவடைந்தது. மேலும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிகை மாளவிகா மோகனுக்கு குரல் கொடுத்தவர் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அவர் வேற யாரும் இல்லைங்க ஒரு கிடாயின் கருணை கதை என்ற படத்தில் நடித்த நடிகை ரவீனா ரவி தான்.

ரவீனா அவர்கள் தான் மாஸ்டர் படத்தில் நடிகை மாளவிகா மோகனுக்கு குரல் கொடுத்துள்ளார். ரவீனா அவர்கள் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்ட் ஆவார். இவர் தன்னுடைய இரண்டு வயதிலேயே டப்பிங் ஆர்டிஸ்ட் பணியை தொடங்கினார். இவர் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். ஓ காதல் கண்மணி, வேலையில்லாபட்டதாரி, பிரேமம், உத்தம வில்லன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

Advertisement

மேலும், இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு என பல மொழி நடிகைகளுக்கும் குரல் கொடுத்து உள்ளார். ரவீனா தாய் ஸ்ரீஜா அவர்களும் சினிமா உலகில் மிக பிரபலமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் காவல்துறை உங்கள் நண்பன் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement
Advertisement