இவரது முழுப்பெயர் லட்சுமி பிரியா சந்திர மௌலி. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பள்ளிப்படிப்பையும் சென்னையில் தான் முடிந்தார் லட்சுமி பிரியா. அதன் பின்னர், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒக்ர்க்கில் எம்.பி.ஏ படித்தார். நல்ல திறமைசாலியான இவர் பின்னர் ஒரு ஐ.டி கம்பெனியில் ஹெச்.ஆராக வேலை செய்துள்ளார்.
இவரது ஸ்டேஜ் பேர்பாமன்ஸ் பார்த்து இயக்குனர் மகிழ் திருமேனி, இவருக்கு முன்தினம் பார்த்தேனே என்கிற படத்தில் நடிக்க வைத்தார். அதிலும் கலக்கிய அவருக்கு இடையில் இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சென்று கலந்து கொண்டு மிதாலி ராஜ் தலைமையில் இந்திய அணியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆடினார்.
இந்திய கிரிக்கெட்டின் பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுத்தால், நானே அவர்களிடம் கேட்டு நடித்துவிடுவேன் எனக் கூறியுள்ளார் இந்த திறமைசாலி. ஏனெனில் அவருடன் நண்பராக ஆடிய லட்சுமிக்கு மிதாலியைப் பற்றி நன்கு தெரியும்லவா.