பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘நான் கடவுள்’ படத்தில் முதன் முதலில் அஜித் தான் நடிப்பதாக இருந்தது. பின்னர் அந்த படத்தில் இருந்து ஒரு சில காரணத்தால் அஜித் விலகினார் என்றும், நடிகர் அஜித் அந்த படத்தில் கோவணம் கட்டிக்கொண்டு நடிக்க சம்மதம் தெரிவிக்காததால் தான் அந்த படத்தில் இருந்து விலகினார் என்ற செய்திகளும் அப்போது பரவியது. ஆனால், உண்மையில் நான் கடவுள் விவகாரத்தில் அஜித்திற்கு பாலாவிற்கும் என்ன நடந்து என்பதை பிரபல யு-டியுப் சேனலில் பத்திரிகையாளர் ஒருவர் விவரத்தை வெளியிட்டுள்ளார்.

Advertisement

நான் கடவுள் படத்திற்காக அஜீத் உடம்பை கஷ்டப்பட்டு குறைத்து நீளமான தலைமுடி வைத்திருந்தார். இந்நிலையில் ஒரு நாள் அஜித்திற்கு ஒரு செய்தி வந்தது. நான் கடவுள் படத்தில் இருந்து அஜித்தை நீக்கி விட்டார்கள் என்று. இதனால் அஜித் மிகவும் அப்செட் ஆக இருந்தார். மேலும் இந்த படத்திற்காக அஜித்க்கு ஒரு கோடி ரூபாய் முன்பணமாக கொடுத்திருந்தார் பாலா

இந்த பிரச்னையை அடுத்து அஜித் மற்றும் பாலா இருவரும் அறையில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அதில் பாலா வட்டிக்கு பணம் வாங்கிய மதுரை அன்புச்செழியன் அவர்களும், பி எல் தேனப்பன் அவர்களும் கூடவே இருந்திருக்கிறார்கள்.அப்போது பாலா, அஜித்திடம் வழங்கிய 1 கோடி ரூபாய் முன்பணத்தை திருப்பி தந்துவிடும்படி கேட்டுள்ளார்.

Advertisement

Advertisement

அஜித்தும் தான் வாங்கிய முன்பணமாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி விட்டார்.ஆனால், பாலாவிற்கு பணம் கொடுத்த அன்பு செழியனுக்கு 1 கோடிக்கான வட்டியையும் அஜித்தான் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் சிறிது வாக்குவாதமும் அங்கே நிலவியுள்ளது.

இறுதியில் நடிகர் அஜித், உங்களுக்கு என்ன வட்டி தானே அதையும் நானே கொடுத்து விடுகிறேன் என்று தான் வாங்கிய 1 கோடி ரூபாய் முன் பணத்தையும் வட்டியுடன் பாலாவிற்கு கொடுத்துள்ளார் அஜித். இதுதான் நடந்த உண்மையான சம்பவம் என்று அந்த யூடுயூப் பத்திரிகையாளர் கூறியுள்ளார். ஆனால்,

Advertisement