நேற்று பேட்டியளித்த AAA தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் அவர்கள் சிம்புவை பற்றி சரமாரியாக கருத்துகளை பதிவிட்டிருந்தார், அவர் சிம்பு படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வர மாட்டார், டப்பிங் பேசவும் சொன்ன நேரத்தில் வரமாட்டார் என கூறி இருந்தார்.இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
சில வருடங்களுக்கு முன்பு வெளியான கோ படம் மக்கள் இடையே பெரும் வரவேற்பை . அரசியலை முன் நிறுத்தி இந்த படம் கதையாக்கப்பட்டது, படம் வெளிவந்த சில நாட்களிலேயே பெரிதும் பேசப்பட்ட படமாக மாறியது .

இப்படத்தில் ஜீவாவின் கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது, இந்த படம் அவருக்கு தனி அந்தஸ்தை கொடுத்தது, ஆனால்
இப்படத்தில் முதலில் நடிக்க சிம்புவைத்தான் அணுகினாராம், அதன் பிறகு சிம்பு தனக்கு ஜோடியாக தமன்னாவை கமிட் செய்யுங்கள் என வற்புறுத்தி இருக்கிறார், கோபமடைந்த பட இயக்குனர் இதற்கு சம்மதிக்காததால், சிம்பு ஹீரோவாக நடிக்க மறுத்துவிட்டார் என பரவலாக பேசப்பட்டது.
ஆனால், சிம்புவின் இந்த செயலால் அவர் ஒரு நல்ல படத்தையும் , நல்ல கதாப்பாத்திரத்தையும் தவறவிட்டார் என்பது,அவருக்கு படம் வெளியான பிறகு தெரிந்திருக்கும்

Advertisement
Advertisement