தற்போது சோசியல் மீடியா முழுவதும் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமீப காலமாகவே சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்த செய்திகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நடிகை சமந்தா- நாக சைதன்யா இருவரும் விவகாரத்தை அறிவித்து இருந்தர்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு ரசிகர்கள் மத்தியில் பேரிடியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் திகழ்ந்து வருகிறார். ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு தனுஷ் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். அதிலும் சமீப காலமாகவே ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த்தடத்தை பதித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு மட்டும் இல்லமால் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து:

மேலும், தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். இவர்களின் பிரிவிற்கு தனுஷ் இதுவரை சிக்கிய சர்ச்சைகள் தான் காரணம் என்று கூறி வருகின்றனர். இந்த சூழலில் சமீபத்தில் தனுஷ் நடித்து இருந்த அட்ராங்கி ரே என்ற இந்தி படம் வெளியானது. இந்த படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இன்னும் அவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்தி பட உலகில் அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரம் ஒன்று உருவாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்படி இந்தி படங்களில் தனுஷ் நடிப்பது தொடர்பாக ஐஸ்வர்யாவுடன் எந்த ஒரு ஆலோசனையையும் கேட்பதில்லை. தன்னிச்சையாகவே முடிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.

தனுஷின் விவாகரத்து முடிவுக்கு காரணம்:

இது தான் இவர்களுடைய பிரிவிற்கு காரணம் என்றும் இந்தி படங்களில் நடித்த பிறகு இவர் குடும்பத்தின் மீது அக்கறை காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. அதோடு தனுஷ் மீது ஐஸ்வர்யா சமீப காலமாகவே கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் தனுஷ் தன்னுடன் படங்களில் நடித்த கதாநாயகிகளுடன் நெருங்கி பழகுவதை ஐஸ்வர்யா விரும்பவில்லை என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இருந்தும் தனுஷ் சில நடிகைகள் உடன் நெருக்கமாக இருந்தார். இதுபற்றி ஐஸ்வர்யாவுக்கு தெரியவந்ததும் அவர் தனுசை கண்டித்தார். இருந்தாலும் தனுஷ் அதைக் கேட்கவில்லை. தொடர்ந்து இந்த நடிகைகள் சர்ச்சையில் சிக்கி இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவிற்கு காரணம்:

அதுமட்டுமில்லாமல் அவர்கள் நிரந்தரமாக பிரிவதற்கும் இதுவே காரணம் என்றும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுமட்டும் இன்றி தனுஷ் ஐஸ்வர்யாவை காதலித்த போது அவர்களுடைய திருமண தேதியை யாரிடமும் சொல்லாமல் அவரே சுள்ளான் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார். இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது தனுஷ் சொன்னது, இது ரஜினி கவனத்திற்கு தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. இது எங்களின் திருமண வாழ்க்கை. எனவே எங்களின் திருமண அறிவிப்பை நான் வெளியிடுவேன் என்று அறிவித்திருந்தார். அதேபோல் சில வருடங்களுக்கு முன்பு கோவாவில் நடைபெற்ற விழாவிற்கு சென்ற ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

Advertisement

தனுஷ்- ஐஸ்வர்யா திருமணத்தில் ரஜினிக்கு உடன்பாடில்லை:

அப்போது பேட்டியில் தனுஷ் ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்ட விஷயத்தில் உங்களுக்கு சம்மதம் தானே? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு ரஜினி, தனுஷ் ஐஸ்வர்யாவிற்கு நாங்கள் திருமணம் செய்யவில்லை. மீடியாக்காரர்கள் தான் அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். நிர்பந்தம் காரணமாகவே அவர்கள் திருமணம் நடைபெற்றது என்று கூறினார். இதில் இருந்து தனுஷ் ஐஸ்வர்யா திருமணத்தில் ரஜினி குடும்பத்தினர் விருப்பம் இல்லை என்பது உறுதியானது. அதுமட்டுமில்லாமல் சில தினங்களாகவே தனுஷ், ஐஸ்வர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இவர்கள் இருவரும் இவ்வளவு விரைவில் விவாகரத்து செய்வார்கள் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

ரஜினி சமரசம் பேச்சுவார்த்தை:

மேலும், தனுஷ்- ஐஸ்வர்யா இடையே கருத்து ஏற்பட்டதை அறிந்தும் ரஜினி மற்றும் லதா இருவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. தனுஷை சமரசம் செய்ய பல தடவை பேச்சுவார்த்தைகள் நடத்தி இருந்தார்கள். ஆனால், இந்த விஷயத்தில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இதனால் ரஜினி மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமே பலனளிக்காமல் போய் விட்டது. பின் இருவரும் பரஸ்பரமாக பிரியலாம் என்று முடிவு செய்தார்கள். அதுமட்டுமில்லாமல் இதை வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். இருந்தாலும் நேற்றிரவு திடீர் என்று இருவரும் தங்களுடைய பதிவை அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள்.

Advertisement