சங்கீதா கழுத்தில் இருக்கும் இரண்டு தாலி குறித்த ஸ்வாரசிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கிய டாக்டர் படத்திலும் கிங்ஸ்லிக்கு வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் நெல்சன்.

மேலும், இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படத்தின் மூலம் யோகிபாபுவை ரெடின் கிங்ஸ்லி ஓவர் டேக் செய்தார் என்று சொல்லலாம். டாக்டர் படத்தை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் மாஸ்டர் பட நடிகையை திடீர் திருமணம் முடித்துள்ளார். சங்கீதா வேறு யாரும் இல்லை, விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் தான்.

Advertisement

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு உதவி செய்ய வரும் மருத்துவராகவும் ஸ்ரீநாத்தின் மனைவியாகவும் மதி என்ற கதாபத்திரத்தில் நடித்தவர் சங்கீதா. இந்த படத்தில் இவர் சில நிமிட காட்சியிலேயே நடித்தாலும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் இந்த டாக்டர்.இவர் மாஸ்டர் படத்தில் மட்டுமல்லாது கார்த்தியின் சுல்தான் திரைப்படத்திலும், அஜித்தின் வலிமை படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் திருமணம் மைசூரில் ஒரு ஒரு படப்பிடிப்பில் நடந்தது. இந்த திடீர் திருமணத்தில் படகுழுவினர் மற்றும் நெருங்கிய உருவாவினர்கள் கலந்துகொண்டனர். ஆரம்பத்தில் பலரும் இது ஷூட்டிங் என்று தான் நினைத்தனர். இப்படி ஒரு நிலையில் சங்கீதாவிற்கு மேக்கப் போட்ட பெண் ஒரு பேட்டியில், இருவரும் பிளான் செய்து திருமணத்தை செய்யவில்லை, அவருக்கு மைசூரில் படப்பிடிப்பு நடந்ததால் அந்த இடைவேளையில் தான் திருமணம் நடந்தது.

Advertisement

ரெடின் கிங்ஸ்லி கிறிஸ்தவர் என்பதால் அந்த மாங்கல்யமும், சங்கீதா இந்து என்பதால் அந்த மாங்கல்யத்தையும் சங்கீதா கழுத்தில் அணிந்துள்ளார். இரு முறைப்படி திருமணம் நடைபெற்றதாகவும் இந்து கோவிலுக்கு சென்ற பின் Church சென்றதாகவும் தெரிவித்துள்ளார். கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவின் திருமண புகைப்படங்களை டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான சதீஷ் தான் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர் ‘திருமண விஷயத்தில் அவர் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தார்.சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள் இல்லையென்றால் டைரக்டாக அறுபதாம் கல்யாணம் தான் செய்ய வேண்டியதாக இருக்கும் என்று நாங்களே அவரை பலமுறை கலாய்த்து இருக்கிறோம். பின்னர் ஒரு கட்டத்தில் அவரே மனம் மாறி சங்கீதா மீது காதலில் விழுந்துவிட்டார். இது பல வருட காதல் என்றும் கூறி இருந்தார்.

Advertisement