தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் தற்போது கிடுகிடுவென வளர்ந்து விட்டார்கள். அந்த வகையில் தமிழில் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். தமிழில் 2001 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான காசி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி இருந்தார்.

ஆனால் தனது ஐந்து வயதிலேயே மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். காசி திரைப்படத்திற்குப் பின்னர் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா திரைப்படத்தில் திரிஷாவின் தங்கையாக நடித்திருந்தார். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மிகவும் சிறுவயதிலேயே சினிமாவில் நுழைந்து விட்டதால் அவருக்கு பெரிதாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையும் பாருங்க : கமல் அழைத்தும் விழாவிற்கு வராதா அஜித். காரணம் அஜித்தின் தந்தை தானாம்.

Advertisement

இருப்பினும் கமல் நடிப்பில் வெளியான எத்தனை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், கார்த்திக்நடித்த அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானத்தின் மூன்று தங்களில் ஒருவராக நடித்திருந்தார். இறுதியாக சசிகுமார் இயக்கத்தில் வெளியான கொடிவீரன் படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்திருந்தார் சனுஷா. தற்போது கையில் எந்த பட வாய்ப்பும் இல்லாததால் மிகவும் கவலையில் இருக்கிறார் அம்மணி.

திரைப் படங்களில் அவரை காணமுடியவில்லை என்றாலும் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகைசனுஷா. அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்திற்கு அருகில்குட்டையான ஆடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சனுஷாவா இது என்று வியப்படைந்துள்ளனர்.

Advertisement
Advertisement