முகநூல்,ட்விட்டர் வலைதளங்களில் வரும் விமர்சனங்களுக்கு மக்கள் மத்தியில் சிறிதளவு செல்வாக்கு இருக்கும் நிலையில் அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் வேலையை ஒரு சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர். அப்படி யூடுயூப் விமர்சனம் செய்யும் நபர்களில் பிரசாந்த் மிகவும் முக்கியமாணவர்.

மற்ற விமர்சகர்களை விட இவரது விமர்சனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவிடுகிறது. இவரது பாண்டா பிரசாந்த் என்று மக்கள் மத்தியில் செல்லப்பெயரை வாங்கிய இவர் சினிமாவில் கூட தனது தடத்தை பதித்து விட்டார்.

இதையும் பாருங்க : ஷெரின் பெயரை அறிவித்த கமல்.! ஆனால், காப்பற்றப்பட்டாரா இல்லை வெளியேற்றபட்டாரா.!

Advertisement

எப்போதும் சமூக வளைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரசாந்த் அவ்வப்போது சில சர்ச்சையான டிவீட்களை செய்து வம்பில் மாட்டிக்கொள்வதும் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் பைக்கில் செல்லும் நபர் ஒருவர் பேருந்தை கடக்க சென்ற போது பேருந்து சக்கரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்த வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

மேலும், அந்த பதிவில், லெப்ட்ல ஓவர் டேக் எடுத்து தொலயாதீங்கடா, அப்படி வேகமா போய் என்னத்த டா புடுங்க போறீங்க ? ஒரு உசுரு போச்சே டா, குறிப்பிட்டிருந்தார் பிரசாந்த். இந்த பதிவை கண்ட இறுதி சுற்றுபட நடிகை ரித்திகா சிங், எனக்கு அவரை நன்றாக தெரியும், அவர் எனது வீட்டில் இருந்து 10 நிமிட தொலைவில் தான் இருக்கிறார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடந்தது. பொத்தல்கள் இருந்த சாலையால் தான் இந்த விபத்து நடந்தது. இந்த விடியோவை தயவு செய்து நீக்க முடியுமா ? என்னை இது மிகவும் காயப்படுத்துகிறது என்று கமன்ட் செய்துள்ளார்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement
Advertisement