இறந்த தனது அப்பாவின் உடலை பார்க்கச் சென்ற போது பாட்டு கேட்டுக்கொண்டு நெய் தோசை சாப்பிட்டதாக பிரபல ஆர் ஜேவும் நடிகையுமான ஆனந்தி பேசி வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. கோமாளி படத்தில் ஜெயம் ரவி தங்கையாக நடித்தவர் Rj ஆனந்தி. கோமாளி படத்திற்கு பின்னர் பிகில், சூரரரை போற்று உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஒரு தீவிர புத்தகப் பிரியர். மேலும், இவர் ‘The Book Show’ என்ற யூடுயூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த சேனலை 2.5லட்சம் பேர் பின்தொடர்ந்து இருக்கின்றனர். இந்த சேனலில் இவர் பல விதமான புத்தகங்கள் குறித்து வீடியோ பதிவிட்டு வருகிறார்.

அதே போல புத்தகம் படிப்பது குறித்த முக்கியத்துவம் மற்றும் அதனால் விளையும் நன்மைகள் குறித்தும் பேசி வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த ஆண்டு பங்கேற்ற பேட்டி ஒன்றில் புத்தகம் படிப்பதனால் தனது தந்தையின் மரணத்தின் போது தான் நடந்து கொண்ட விதம் குறித்து இவர் கூறி இருந்தது பலரையும் ஆச்சரியபட வைத்துள்ளது. இதுகுறித்து அவர் பேசிய அவர் ‘சென்னையில் இருந்து கோயம்பத்தூருக்கு அப்பாவின் உடலை பார்க்க காரில் போனேன்.

Advertisement

கோயம்பத்தூர் போகும் வரை எனக்கு பிடித்த பாட்டை எல்லாம் கேட்டுக்கொண்டே போனேன். வழியில் நெய் ரோஸ்ட் சாப்பிட்டேன். இது போன்ற சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும் என்பது நமக்குத் தெரியாது. இதை யாரும் சொல்லிக் கொடுக்க வில்லை ஆனால், இவையெல்லாமே ஒரு புத்தகத்தில் இருந்து கிடைக்கும் ஒரு விஷயமாக இருக்கும். இங்கே இருந்து நான் என்னுடைய அப்பாவை போய் பார்க்கும் போது இது ஒரு இயற்கையான விஷயமாகத் தான் தெரிந்தது.

அப்பாவின் முகத்தைப் பார்க்கும் போது கூட இதுதானே வாழ்க்கை இப்படித்தானே முடியும் என்று தோன்றியது. என் அப்பாவை நினைத்து நான் அழலாம், ஆனால், இது எனக்கும் நடக்கலாம். அப்பாவின் சடங்கு நடக்கும் போது அங்கே மழை தூறியது அழகை ரசிக்க அப்பா இல்லை. வெயில் அடிக்கிறது காற்று அடிக்கிறது. அவ்வளவு அழகாய் இந்த உலகம் இருக்கிற.து இதற்கெல்லாம் நடுவில் அப்பா இருக்கிறார். ஆனால், அவரால் எதையும் உணர முடியவில்லை. இதேபோல நம்முடைய நிஜமான வாழ்க்கையில் செய்திருப்போம்.

Advertisement

சூரியன் அழகாக இருக்கும் நிலா அழகாக இருக்கும் ஆனால் இதை எதையும் பார்க்காமல் நாம் ஏதோ ஒரு சிந்தனையில் இருப்போம். இதுவா வாழ்க்கை, இருக்கும் தருணத்தை அனுபவியுங்கள். இதை போன்ற விஷயங்களை புத்தகங்கள்தான் சொல்லிக் கொடுக்கும் புத்தகங்கள் என்னுடைய வாழ்க்கையை ரசிக்க உதவியிருக்கிறது என்று பேசி இருந்தார். ஆனந்தியின் இந்த பேச்சை கண்ட சிலர், அப்பா இறந்த போது எப்படி பாடல் கேட்க தோன்றும், நெய் தோசை சாப்பிட தோன்றும் என்று கடுமையாக விமர்சித்து வந்தனர்.

Advertisement

அந்த வகையில் Plip Plipஉம் இவரது பேச்சை கடுமையாக Troll செய்தனர். இப்படி ஒரு நிலையில் தனது தந்தையின் இறந்த நாளில் பதிவு ஒன்றை போட்டுள்ள ஆனந்தி ‘அப்பா இல்லாமல் 2 வருடங்கள் ஆகிறது. பிலிப் பிலிப், என் அப்பாவின் மரணம் பற்றி நான் அளித்த பேட்டியை நீங்கள் கேலி செய்தது என்னை காயப்படுத்தியது. அப்பா மருத்துவமனையில் இருந்தபோது, ​​அவருக்குப் பிடித்த நெய் ரோஸ்ட் மருத்துவமனையில் அவருக்கு வழங்கப்படவில்லை. எங்களின் இரவு உணவு எப்பொழுதும் ஆஸ்பத்திரி கேண்டீனில் இருந்து வாங்கும் நெய்ரோஸ்ட் தான்.

சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில், எனது கடைசி நெய் வறுக்கையை அவருடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அது ஏன் மிகவும் நன்றாக இருந்தது என்று உங்களுக்குத் தெரியாது. புற்றுநோயால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த ஒருவரிடம் கேளுங்கள், அவர்கள் துக்கம் மற்றும் நிவாரணம் இரண்டின் குழப்பத்தையும் உங்களுக்குச் சொல்வார்கள். மேலும், என் அப்பா இறந்த அன்று என் நெய் ரோஸ்ட் சாப்பிட்ட எனக்கு “படித்தாலே பைத்தியம் பிடிக்கும்” என்று கட்டுரைகள் எழுதிய அனைத்து ஊடகவியலாளர்களுக்கும், இந்த பூமியை விட்டுச் சென்றதற்கு நன்றியை உணர வைத்தீர்கள். இது ஒரு அழகான உலகம், நீங்கள் அதில் எதையாவது சேர்க்க முடியாவிட்டாலும், அதை அப்படியே விடுங்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement