தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் இன்று நடக்கவிருத்த ஐ பி எல் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. ஆனால் போராட்டகாரர்களை அதிரடிப்படையினர் தடியடி நடித்தி போரத்தை கலைத்தனர.

Advertisement

இந்நிலையில் ஸ்டார் தமிழ் தொலைகதவ்ஹியில் ஐ பி.எல் லின் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ஆர். ஜே.பாலாஜி இன்று நடக்கவிருக்கும் போட்டியில் இருந்து விலகி விட்டாராம் .தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்க்த்திலும் சரி, சென்னை வெள்ள பெருக்கு பிரச்சனையிலும் சரி ஆர்.ஜே.பாலாஜி தனது ஆதரவை தெரிவித் திருந்தார். தற்போது தமிழகத்தில் நடந்து வரும் காவேரி போராட்டதத்திலும் தனது பங்கிற்க்கு தனது தொகுப்பாளர் பணியை புறக்கணித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவிக்கையில் ஐ பி எல் நிர்வாகத்திடம் தான் இந்த போட்டியில் தொகுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்த போது அவர்களும் என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள்.மேலும் 234 எம்எல்ஏக்கள், 40 எம்பிக்களை நாம் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்துள்ளோம்.எனவே அவர்க்ள் அனைவரும் தங்களது பதிவியை ராஜினாமா செய்தால் ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் இந்த பிரேச்சனையின் பக்கம் திசை திரும்பும் என யோசனை கூறியுள்ளார் ஆர் ஜே பாலாஜி.

Advertisement
Advertisement