தமிழில் காக்கா முட்டை கடைசி விவசாயி போன்ற இரண்டு வெற்றி படங்களை இயக்கிய மணிகண்டன் வீட்டில் நடந்திருக்கும் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஇருந்த நிலையில் தற்போது திருடர்கள் செய்த செயல் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் வெளியான காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனதாக அதிகமானவர் இயக்குனர் மணிவண்ணன் இவர் இயக்கிய முதல் திரைப்படத்திற்கு பல விருதுகள் குவிந்தது அதிலும் சிறந்த குழந்தைகளுக்கான படம் என்ற தேசிய விருதையும் இந்த படம் வெற்றி பெற்றிருந்தது.

காக்கா முட்டை திரைப்படத்திற்கு பின்னர் குற்றமே தண்டனை ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு கடைசி விவசாய என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பல புதுமுகங்கள் நடித்து இருந்தனர். அதிலும் இந்த படத்தில் நல்லனாண்டி என்ற உண்மையான விவசாயியை நடிக்க வைத்திருந்தார் மணிகண்டன்.

Advertisement

இந்த திரைப்படம் குறைவான திரையரங்குகளில் வெளியான போதிலும் இந்த படத்தை பார்த்த பலரும் பாராட்டி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியில் நடைபெற்ற 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான பட்டியலில் ‘கடைசி விவசாயி’ இரண்டு பிரிவுகளில் விருது வென்றுள்ளது. ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதையும் பெற்றது.

இப்படி ஒரு நிலையில் மணிகண்டன் வீட்டில் இருந்த தேசிய விருது உட்பட பணம் மற்றும் நகைகள் கொள்ளை போகி இருக்கிறது. இயக்குனர் மணிகண்டனின் சொந்த ஊர் உசிலம்பட்டி இவரது வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இரண்டுமே அங்கு தான் இருக்கிறது படப்பிடிப்புகள் இல்லாத நேரத்தில் மணிகண்டன் சென்னையில் இருக்கும் வீட்டில் வசித்து வருவது வழக்கம் அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக அடுத்த படத்தின் பணிகளுக்காக தன்னுடைய குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

Advertisement

மணிகண்டன் இல்லாத சமயத்தில் அவருடைய கார் ஓட்டுனர்கள் தான் அந்த வீட்டை கவனித்து வந்திருக்கிறார்கள் மணிகண்டன் வீட்டில் இருக்கும் நாய்க்கு தினமும் உணவு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நேற்று மாலை 4 மணி அளவில் நாய்க்கு உணவு வைப்பதற்காக மனு தண்டனை ஓட்டுனர் வீட்டிற்கு சென்று இருக்கிறார் ஆனால் அங்கு சென்று பார்த்தபோது அளவுகள் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் இதனால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

தகவல் அறிந்து வந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து இருக்கின்றனர் விசாரணையில் கடைசி விவசாய படத்திற்காக இறுதியாக வாங்கிய இரண்டு தேசிய விருதுகளுக்காக வெள்ளி பதக்கங்கள் ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஐந்து பவுன் நகை திருட்டு போய் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இயக்குநர் மணிகண்டன் வீட்டில் பணம், நகை மற்றும் வெள்ளி பதக்கங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல், மணிகண்டனின் வீட்டு வாசலில் ஒரு பாலிதீன் பையில், தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் திரும்ப வைத்துச் சென்றுள்ளனர். அத்துடன் ஒரு கடிதத்தையும் விட்டுச் சென்றுள்ளனர். அதில், அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு என்று எழுதி வைத்துள்ளனர்.

Advertisement