அடிச்சி தூக்கில் தம்பி ராமையாவா.! இந்த பாடலை பாடப்போவது ரோபோ சங்காராம்.! அவரே சொன்ன தகவல்.!

By Rajkumar · 8/3/2019

விஜய் டிவி மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் காமெடியனாக வலம் வருபவர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் தொடங்கிய இவரது பயணம், வெள்ளித்திரையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.

விஜயுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம் என்று பல படங்களில் நடித்துள்ளார் ரோபோ சங்கர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் தனது நடன திறமையை காட்டிய ரோபோ தற்போது பாடகராகவும் அவதாரமெடுத்துள்ளாராம்.

நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகவுள்ள 'கன்னி மாடம்' என்ற படத்தில் தான் ரோபோ சங்கர் பாடல் ஒன்றை பாட இருக்கிறார். புதுமுக நடிகர்கள் ஸ்ரீராம் கார்த்தி மற்றும் காயத்ரி நடிக்கும் இந்த புதிய படத்தில் ஆடுகளம் முருக தாஸ், கஜராஜ் போன்றவர்களும் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் பாடுவது குறித்து பேசிய ரோபோ சங்கர், பாடலாசிரியர் விவேக்காவால் (அடிச்சி தூக்கு பாடலை எழுதியவர்) எழுதப்பட்ட குத்து பாடல் பாஷாவில் இருந்து 'நானன் ஆட்டோக்கரன்' வகையிலான நகரில் வாகன ஓட்டுநர்களுக்கு முறையான அஞ்சலி செலுத்தும் பாடலாக அமைந்துள்ளது. முன்னர் கன்னடத்தில் உள்ள படங்களுக்கு இசையமைத்த இசை அமைப்பாளர் ஹரி சாய், என் போன்ற ஒரு வழக்கத்திற்கு மாறான குரல் ஏதோ வித்யாசமாக இருக்கும் என்று நம்புகிறார் அதில் எனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் என்று நினைத்தேன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full